மேலும் அறிய

Chennai Traffic Police : ‘சென்னை மக்களே ஹெல்மெட் போடாமல் போறீங்களா?’ உங்களை போலீஸ் போட்டோ எடுத்தாலே போதும், அபராதம் வீடு தேடி வரும்..!

’இனி சென்னையில் போலீசார் இல்லையென்று நினைத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் அபராதம் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது’

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இனி போலீசார் மறித்து பிடித்து அபராதம் விதிக்க வேண்டியதில்லை. அவர்களை தங்களது செல்போனில் புகைப்படம் மட்டுமே எடுத்து அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை சென்னை போக்குவரத்து போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.Chennai Traffic Police  : ‘சென்னை மக்களே ஹெல்மெட் போடாமல் போறீங்களா?’ உங்களை போலீஸ் போட்டோ எடுத்தாலே போதும், அபராதம் வீடு தேடி வரும்..!

செல்போனில் படம் எடுத்தால் போதும், அபராதம் வீடு தேடி வரும்

 இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிகளை மீறும்போது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிலர் போக்குவரத்து போலீசாருக்கே போக்கு காட்டிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். அதோடு, ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தி, அபராதம் கட்டச் சொன்னால், எனக்கு ஐஜி-யை தெரியும் அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால், பல்வேறு பிரச்னைகளை போலீசார் அணுதினமும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்ற, சங்கடங்களை தவிர்க்க சென்னை போலீசார் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம், விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களை போலீசார் மடக்கிப் பிடித்துதான் அபராதம் விதிக்க வேண்டியது என்பது இல்லை. அவர்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தாலே போதுமானது. அதன்மூலம், தொடர்புடைய வாகன ஓட்டிக்கு அபராதத் தொகையானது அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் சோதனை முயற்சி தற்போது சென்னையில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இந்த செல்போன் செயலி மூலம் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 சிக்னலில் கேமரா – இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யும் விதமாக சென்னையில் உள்ள 186 சிக்னல்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சிக்னலை மதிக்காமல் கடந்து செல்லுதல், தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட 7 விதிமுறை மீறலுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

விதி மீறல்களை குறைக்க நடவடிக்கை

பெருமளவு வாகன பெருக்கம் நிறைந்த நகரமான சென்னையில் விபத்துகளை தடுக்கவும் விதிகளை மீறுவோரை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிக்னல்களில் சிசிடிவி, செல்போனில் படம் என தற்போது தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

அதோடு, போக்குவரத்து போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. சிக்னல்களில் நின்று மட்டுமே அவற்றை இயக்க முடியும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அருகே எங்கிருந்து வேண்டுமானலும் சிக்னல்களை இயக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டு அவை வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget