மேலும் அறிய

தாம்பரம் டூ செங்கல்பட்டு, 100 கி.மீ வேகம்.. கூடுதல் ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி!

தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதையின் வேகம் 80 கிமீ இருந்து 100 கிமீ வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை மின்சார ரயில்களை எடுத்துக் கொண்டால், சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து , பள்ளி கல்லூரிகள் செல்பவர்கள், தங்கள் பணிக்காக சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதற்கு, பிரதான வழித்தடமாக இது இருந்து வருகிறது. ஆனால் போதிய வழித்தடங்கள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படாமல்,  தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 250 முதல் 270 ரயில்கள் வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. 

தாம்பரம் டூ செங்கல்பட்டு, 100 கி.மீ வேகம்.. கூடுதல் ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி!
 
புறநகர் பகுதி வளர்ச்சி
 
சென்னையின் புறநகர் பகுதிக்கான, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பணிக்காக சென்னையை நோக்கி தினமும் படையெடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்காக போதிய அளவில் தொடர்வண்டிகள் இயக்கப்படவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இவர்கள் வசதிக்காக, கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 
 

தாம்பரம் டூ செங்கல்பட்டு, 100 கி.மீ வேகம்.. கூடுதல் ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி!
 
மூன்றாவது பாதை
 
 தாம்பரம் -- செங்கல்பட்டு வரை இரண்டு பாதை மட்டுமே இருந்து வந்தது.  கூடுதல் ரயில்களை இயக்குவதற்காக செங்கல்பட்டு தாம்பரம் இடையே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்றாவது பாதை அமைக்கப்பட்டது. சுமார் 598 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பாதையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. மூன்றாவது பாதையை அமைக்கப்பட்டும், வழிமுறைகளின் படி படிப்படியாக வேகம் அதிகரிக்கும் முயற்சியும் நடைபெற்று வந்தது.
 
100 கிலோமீட்டர் வேகம்
 
மூன்றாவது பாதை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பொழுது 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு ரயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. பின்னர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வேகம் அதிகரிக்கப்பட்டு 80 கிலோமீட்டர் அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் 100 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் டூ செங்கல்பட்டு, 100 கி.மீ வேகம்.. கூடுதல் ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி!
 
கூடுதல் ரயில்கள்
 
இதனை அடுத்து செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை நேரத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மூன்றாவது பாதையில் விரைவு ரயில்கள் இயக்கும் போது, மற்ற இரண்டு பாதைகளில் கூடுதலாக சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையே மேலும் ,3 முதல் 4 ரயில்களை காலை 7 மணி முதல் 9 மணி வரை இயக்கம் பட்சத்தில்  புறநகர் பகுதிகளில் இருக்கும் கூட்டம் நெரிசலை குறைக்கலாம். அதே போல மாலை வேலைகளிலும் கூடுதல் ரயில்களை இயக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு இது பெரும் நிம்மதியை தரும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். விரைவில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்குவது பொதுமக்களுக்கு நிம்மதியே..
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்னா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்னா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்னா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்னா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
Embed widget