மேலும் அறிய

Caste Attendance | அதிர்ச்சி.. சென்னையில் சாதி அடிப்படையில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடு.. நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

”ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தெரிவித்தார்.

சென்னையில்  ஒரு தொடக்கப்பள்ளியில் சாதிகளின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வருகைப் பதிவேடு எழுதப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா பெருந்தொற்றையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தனது பள்ளி மாணவர்களை மூன்று பேட்ச்களாகப் பிரித்துள்ளது ஒரு பள்ளி நிர்வாகம். மாணவர்களின் சாதி அடிப்படையில் 3ஆக பிரிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த நடைமுறை புதிதானதல்ல, இதே போன்ற வருகைப் பதிவேட்டு முறையை ஏற்கெனவே பின்பற்றி வருகிறோம். சாதி அடிப்படையில் மாணவர்களை நாங்கள் பிரிக்கவில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார். அவர் அந்த வருகை பதிவேட்டையும் எடுத்து காண்பித்தார். அதில் பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இந்து), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( கிறிஸ்தவர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்கள்), முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நிர்வாகத் தேவைகளுக்காகத்தான் என்றும், மாணவர்களுக்கு சாதி பற்றி தெரியாது” என்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 


Caste Attendance | அதிர்ச்சி.. சென்னையில் சாதி அடிப்படையில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடு.. நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

இது தொடர்பாக பேசிய சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) டி. சினேகா,   "எல்லா பள்ளிகளிலும், அகரவரிசையில் மட்டுமே வருகைப்பதிவு இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் வரிசைப்படுத்தி பெயர்களை எழுதுவது ஒருபோதும் நடைமுறையில் இல்லை, அது சரியாக நடைமுறைப்படுத்துவதை இனி உறுதி செய்வோம். இது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.” என தெரிவித்தார்.  மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்படும் என்றும் மாணவர்களின் பேட்ச்கள் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனெ சமூக செயற்பாட்டாளர் வி.கோபால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஏதோ தொலைதூர கிராமங்களில் நடப்பதுபோல சென்னையில் இது நடப்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. ஆசிரியர்கள்தான் சாதிக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்தார்.

இது போன்ற நடைமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என  சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அகர வரிசையின் அடிப்படையில்தான் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை குறிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Embed widget