![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நிதி நிறுவன மோசடி.... தோண்ட தோண்ட வெளிவரும் கோடிகள்.. மின்மினி சரவணன் கைது..!
ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன் கைது செய்யப்பட்டார்.
![நிதி நிறுவன மோசடி.... தோண்ட தோண்ட வெளிவரும் கோடிகள்.. மின்மினி சரவணன் கைது..! eow police arrested Minmini Saravanan Kanchipuram branch director of IFS International Finance நிதி நிறுவன மோசடி.... தோண்ட தோண்ட வெளிவரும் கோடிகள்.. மின்மினி சரவணன் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/95d9f56c0bbe2ac0bd869b450b4f4f161660302232528109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![நிதி நிறுவன மோசடி.... தோண்ட தோண்ட வெளிவரும் கோடிகள்.. மின்மினி சரவணன் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/63bb3549317f8c16849213319b7a420c1659675910_original.jpg)
![நிதி நிறுவன மோசடி.... தோண்ட தோண்ட வெளிவரும் கோடிகள்.. மின்மினி சரவணன் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/7ec1970c1fe52154c41efe9d792c46c01660302261648109_original.jpg)
21 இடங்களில் சோதனை.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் IFS என்ற கம்பெனி தொடர்பாக தமிழ் நாடு முழுவதும் நடந்த சோதனையில், 220 முக்கிய ஆவணங்கள், 13 ஹார்ட் டிஸ்க், 5 லேப்டாப், 14 செல்போன்கள், 40 சவரன் நகை மற்றும் ஒரு கோடியை 50 லட்ச ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதலீடு தொடர்பான தகவல்கள் வெளியாகின
ஐஎஃப்எஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 79 ஆயிரம் பேரிடம் 4,383 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் 1680 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும், திருச்சியை சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீடு பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை அறிவிப்பு
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. eowlnsifscase@gmail.com ஆர்பிஐ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)