மேலும் அறிய

வீடு ஒப்படைக்க தாமதம் ; கட்டுமான நிறுவனம் ரூ.10 லட்சம் வழங்க அதிரடி உத்தரவு

வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனத்திற்கு , ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி உத்தரவு

சொந்த வீடு கனவு 

எவ்வளவு தான் சொத்து , பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் , வாங்கிய இடத்தில் விரைவில் வீடு கட்ட வேண்டும் என கவலையில் இருப்பவர்கள் ஏராளம்.

ஒப்பந்தத்தை மீறி பணிகளை முடிக்க தாமதம்

நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு , சொந்த வீடு கட்ட வேண்டும் என பல கனவுகளுடன் இருப்போம். ஆனால் , இதில் நாம் முக்கிய விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக இருப்பது , நம் வீட்டை கட்டும் பணியை யாரிடம் ஒப்படைக்கிறோம் என்பது தான். நாங்கள் குறைந்த விலையில் வீடு கட்டி தருகிறோம் என்று விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல் , அந்த நிறுவனங்கள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு பின்பு பணம் மற்றும் ஒப்பந்தங்களை போட வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் பணம் வாங்கி கொண்டு வீடு கட்டி ஒப்படைக்கும் பணிகளை மிக தாமதம் செய்கிறது.

வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு தையூர் கிராமத்தில் அக்ஷயா நிறுவனம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. அதில் வீடு வாங்க, மஞ்சுளா கிருஷ்ணா என்பவர், 2017 - ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, அவர் 52.42 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் செலுத்தி வந்துள்ளார். 2017 - ம் ஆண்டு பணிகள் முடிந்து வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தது.

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வீட்டை காலத்தில் ஒப்படைக்கவில்லை. இதனால், வீடு வாங்குவதை கைவிட முடிவு செய்த மஞ்சுளா கிருஷ்ணா அதை கட்டுமான நிறுவனத்துக்கு தெரிவித்தார். இதற்கு கட்டுமான நிறுவனம் தரப்பில் உரிய பதில் வராத நிலையில் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மஞ்சுளா கிருஷ்ணா புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு ; 

புகாரில் குறிப்பிடப்பட்ட கட்டுமான நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. அந்நிறுவனத்திடம் பணம் செலுத்தியவர், வீட்டுக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட காலத்தில் வீடு கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்.

அத்துடன் வழக்கு செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயை அந்நிறுவனம் வழங்க வேண்டும். இத்தொகையை, 90 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget