மேலும் அறிய
chess olympiad 2022: களத்தில் பிரக்ஞானந்தா.. தொடருமா இந்தியாவின் வெற்றி.. முக்கிய வீராங்கனைக்கு ஓய்வு
நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது .

செஸ் ஒலிம்பியாட்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. நேற்று ஓய்வாடி கொடுக்கப்பட்டிருந்த தமிழக வீரர், இன்று நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார். நேற்று ஓய்வில் இருந்த நிறைமாத கர்ப்பிணி ஹரிக்காவிற்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா யாருடன் போட்டியிடுகிறது. களம் இறங்கும் வீரர்கள் பட்டியல்.
இந்திய பொது ( OPEN ) அணி A– மால்டோவா அணியுடன் மோதுகிறது.
ஹரிகிருஷ்ணா
சசிகிரண் ,
ஶ்ரீநாத் நாரயணன்
அர்ஜூன் எரிகைசி
இந்திய பொது ( OPEN ) அணி B எஸ்டோனியா அணியுடன் மோதுகிறது.
குகேஷ்
பிரக்ஞானந்தா
அதிபன்
ரவுனக் சத்வாணி
இந்திய பொது ( OPEN ) அணி C, மெக்சிகோ அணியுடன் மோதுகிறது.
கங்குலி
சேதுராமன்
குப்தா
கார்த்திகேயன் முரளி
இந்திய பெண்கள் அணி A , அர்ஜென்டினா உடன் மோதுகிறது.
கொனெரு ஹம்பி
வைஷாலி
தனியா சச்தேவ்
குல்கர்னி பாக்தி
இந்திய பெண்கள் அணி B லாட்வியா அணியுடன் மோதுகிறது.
வந்திகா அகர்வால்
பத்மினி ராவுட்
சவுமியா சாமிநாதன்
கோமேஸ் மேரி அண்
இந்திய பெண்கள் அணி C சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது.
கர்வதே ஈஷா
நந்திதா
விஷ்வா வானவாலா
பிரத்யுஷா போடா
நேற்று இந்தியா வெற்றி பெற்ற விவரம் பின்வருமாறு :-

இந்திய பெண்கள் அணி A – தஜிகிஸ்தான்
1. கொனெரு ஹம்பி 41 வது நகர்த்தலில் வெற்றி
2. வைஷாலி – அப்ரோவா 39 வது நகர்த்தலில் வெற்றி
3. தனியா சச்தேவ் – 59 நகர்த்தல் வெற்றி
4. குல்கர்னி பாக்தி – 50 வது நகர்த்தலில் வெற்றி
இந்திய பெண்கள் அணி B – வேல்ஸ் அணிக்கு எதிராக.
1. வந்திகா அகர்வால் - 56 வது நகர்த்தலில் வெற்றி
2. சவுமியா சாமிநாதன் – கிம்பர்ளி, 37 வது நகர்த்தலில் வெற்றி
3. கோமேஸ் மேரி அண் – 29 வது நகர்த்தலில் வெற்றி
4. திவ்யா தேஷ்முக் – 34 வது நகர்த்தலில் வெற்றி
இந்திய பெண்கள் அணி C – ஹாங் காங்
1. கர்வதே ஈஷா – 49 வது நகர்த்தலில் வெற்றி
2. நந்திதா – 29 வது நகர்த்தலில் வெற்றி
3. சாஹிதி வர்ஷினி – 37 வது நகர்த்தலில் வெற்றி
4. பிரத்யுஷா போடா – 32 வது நகர்த்தலில் வெற்றி
மேக்னஸ் கார்ல்சன்
உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்ஸன் இன்று உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கிறார். நேற்று அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. 2013ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மேக்னஸ் கார்ல்சன் கிளாசிக்கல் செஸ் விளையாடுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion