மேலும் அறிய

Parandur Airport : பரந்தூர் விமான நிலையம்... மக்கள் வைத்த கோரிக்கை.. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி என்ன?

விமான நிலையம் அமைய உள்ள பகுதிகள் இன்னும் வரையறை செய்யவில்லை உங்கள் பகுதிக்கு அரசு, கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உங்கள் கோரிக்கை பரிசளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன. இதில் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதாக வெளியான வரைபடத்தை கண்டு அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஏகனாபுரம் கிராம மக்கள் 200 பேர் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Parandur Airport : பரந்தூர் விமான நிலையம்... மக்கள் வைத்த கோரிக்கை.. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி என்ன?
கிராம மக்கள் கூறுவதாவது..
 
பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன .12 கிராமங்களை சேர்ந்த பகுதிகள் உள்ளடக்கியதாக வரைபடம் வெளியானது. அதில் 11 கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை தவிர்த்து மற்ற பகுதியில் விமான நிலையம் அமைய  உள்ளன. ஆனால் ஏகநாபுரம் கிராமம் மட்டும் குடியிருப்பு பகுதி முழுவதும் விமானம் அமைய உள்ளதாக தெரிய வருகிறது .

Parandur Airport : பரந்தூர் விமான நிலையம்... மக்கள் வைத்த கோரிக்கை.. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி என்ன?
இதன் காரணமாக நாங்கள் சிறு குறு  நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்களை சந்தித்து எங்கள் பகுதியில்  சுமார் 600 குடும்பத்தைச் சேர்ந்த 2500  பேர் வசித்து வருகிறார்கள். காலம் காலமாக நாங்கள் வசித்து வரும் நிலையில் எங்கள் குடியிருப்பு பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என கூறியதாகவும் , உங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி  பரிசீலனை செய்வதாக  அமைச்சர் தெரிவித்தார் .

Parandur Airport : பரந்தூர் விமான நிலையம்... மக்கள் வைத்த கோரிக்கை.. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி என்ன?
இதனை அடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் தற்பொழுது வெளியாகி உள்ளது பழைய வரைபடம் எனவே தமிழக அரசு எல்லைகளை வரையறுத்து பின்னர் நாங்கள் உங்கள் பகுதிக்கு வந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உங்களை சந்திப்போம். உங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் விமான அமைக்க ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கிராம மக்கள் கூறினர். ஏகனாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிள் பாடி, எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் ,பரந்தூர், நெல்வாய், பொடவூர், நாகப்பட்டு ,தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
 
1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!

விமான நிலையம் எங்கு அமைய போகிறது என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்து வந்த பாதையை கொஞ்சம் டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.

1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.

1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்

1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு  தொழில் வளர்ச்சி துறை ஆணையம் ,  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்  தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர்.

1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில்  3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல்  வெளியானது.

2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .

2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர்  கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம்  நிலையம் அமைக்க முடிவு செய்தார்.

2012 மார்ச் மாதம்  சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு  திட்டம் தீட்டியது.

2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில்  4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.

2022 மார்ச் மாதம்  அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு  மேற்கொண்டனர்.

2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
Embed widget