மேலும் அறிய

Chennai Traffic Changes: புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் 31-ந் தேதி போக்குவரத்தில் அதிரடி மாற்றம்..! முழு விவரம்..

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு, புத்தாண்டு கொண்டாடட்டத்தையொட்டி, டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் பெருந்திரளாக கூடி கொண்டாடுவர். 

இந்நிலையில், மக்கள் கூட்டமாக சில இடங்களிலே கூடுவதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி காலை 6 மணி வரை கடற்கரை உட்புற சாலை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் வழியாக, வாகனம் வெளியேறலாம் எனவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு விழாவை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.

“வரும் 31ஆம் தேதி,  மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்”

மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தீவிர கண்காணிப்பு:

முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாக கண்காணிக்கப்படும். 

ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் அவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏற்படுத்தும் விதமாக தனியார் ஹோட்டல் விடுதிகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகளும் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதி கொடுக்கப்படும். மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.

கடற்கரையில் கூடுவதற்கு தடையா..?

கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடை இல்லை. ஆனால் கோவிட் கடைபிடித்த கட்டுப்பாட்டுகளை கடைபிடிக்க வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் மூடப்படும். 300க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும்.

ஜீரோ ஃபெடாலிட்டி நைட் என்பதுதான் எங்களின் நோக்கம். நல்ல விஷயத்தில் உயிர் இழப்புகள் ஏற்படக்கூடாது. 18 வயதுக்கு உட்பட்டோர் இந்த விதிமீறல்களில் ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் பழிவாங்கும் ரவுடிகள் செயல்பாடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது,

சம்பவம் நடந்த அடுத்து 2.42 நிமிடங்களில் காவல் துறை சம்பவ இடத்துக்கு வரும் எனவும்  குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டியிடம் போலீசார் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget