![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Chennai Rains: சென்னையில மறுபடி இருட்டுது.. அடுத்த புயல் மிரட்டுது.. மீண்டும் தொடங்கிய மழை!!
3 நாட்கள் இடைவெளி விட்ட நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது
![Chennai Rains: சென்னையில மறுபடி இருட்டுது.. அடுத்த புயல் மிரட்டுது.. மீண்டும் தொடங்கிய மழை!! Chennai: Rain started showered after a gap of three days in Chennai Chennai Rains: சென்னையில மறுபடி இருட்டுது.. அடுத்த புயல் மிரட்டுது.. மீண்டும் தொடங்கிய மழை!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/17/cf7c5d4e524d92d6d460a5bdbcf330d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த வாரம் முழுக்க சென்னையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தததோடு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழை வெள்ளத்தால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளும், சுரங்கப்பாதைகளும் நீரில் மூழ்கின. பின்னர் மெல்ல மெல்ல சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த 3 நாட்களாக சென்னையில் லேசான வெயிலும், மேகமூட்டம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கிண்டி, ஆயிரம் விளக்கு, அமைந்தகரை, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
இப்போது அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் சென்னைக்கு மழை வராது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்
இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
ஏற்கனவே கூறியிருந்தது போல நாளை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் என்றும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)