Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 2-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(02-08-2025): சென்னையில், நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 2-ம் தேதி, அதாவது சனிக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவடி
சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், கோவர்த்தனகிரி, என்எம் சாலை, பிஎச் மெயின் ரோடு, புது நகர், ஆனந்தன் நகர்.
வேளச்சேரி
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தரவுபதி அம்மன் கோயில், ஜெகந்நாதபுரம், டான்சி நகர், காச்தி தெரு, விஜிபி செல்வநகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.
கொட்டிவாக்கம்
ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6-வது தெரு , ராஜ கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 முதல் 3-வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3 வது தெரு, சீனிவாசபுரம் 1 வது முதல் 3 வது தெரு, சீனிவாசபுரம் 1-வது முதல் 3-வது தெரு, நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 39 முதல் 43-வது குறுக்குத் தெருக்கள், திருவள்ளுவர் நகர் 2 முதல் 7 -வது பிரதான சாலை, காவேரி நகர் 1-வது முதல் 6-வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1-வது தெரு, ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள் தென்றல் H43 முதல் H50 வரை, முல்லை ஃபிளாட்ஸ் H70 முதல் H78 வரை.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















