மேலும் அறிய

சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்

சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 2 ஆயிரத்து 423 கோடி ரூபாயில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சென்னையில் மிகப்பெரிய பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது குடிநீர் பிரச்சினை. மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக தற்போது தண்ணீர் பற்றாக்குறை பல மடங்கு குறைந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழை காரணமாகவும் தண்ணீர் போதியளவு இருக்கிறது. 

2 ஆயிரத்து 423 கோடிக்கு புதிய குடிநீர் திட்டம்:

இருந்தபோதிலும் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கத்தில் குடிநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர் உள்ளிட்ட பல பகுதி மக்கள் ஒரு வார காலத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி, சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இணைப்பதன் மூலம் சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 2 ஆயிரத்து 423 கோடி நிதி கோரி  ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் கோர மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமாறு அனுப்பியுள்ளனர். ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இன்னும் சில நடைமுறைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மூத்த மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். 

7 நீர் ஆதாரங்கள் இணைப்பு:

1000 மி.மீட்டர் முதல் 1800 மி.மீட்டர் வரை அகலம் கொண்ட குழாய்கள் மூலம் இந்த நீர் ஆதாரங்கள் இணைக்கப்பட உள்ளது. இதன்படி, கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம், வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்குன்றம் ஏரி, மீஞ்சூர் சுத்திகரிப்பு நிலைய நீர், கண்ணன்கோட்டை தோர்வாய் கண்டிகை மற்றும் சோழவரம் ஏரி ஆகியவை இணைக்கப்பட உள்ளது. இந்த 7 நீர் ஆதாரங்களை இணைப்பதன் மூலம் சென்னை நகரம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

சிறப்பு இதுதான்:

பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள் மூலம் இந்த நீர் ஆதாரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் மோட்டார் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சிறப்பு என்னவென்றால், ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்பட்டாலும், மற்றொரு நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படும்.  அதாவது, ஒருவேளை மீஞ்சூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தோ அல்லது செங்குன்றம் ஏரியில் இருந்தோ அதே பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். 

தினசரி 10 லட்சம் லிட்டர்:

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 1086.95 மெகா லிட்டர் தினசரி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். 1 மெகா லிட்டர் என்றால் 10 லட்சம் லிட்டர் என்று அர்த்தம். இந்த குழாய்கள் மொத்தம் 93.26 கி.மீட்டருக்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் தொடங்கப்பட்டால் 30 மாதத்தில் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும்.  இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு சென்னையில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget