மேலும் அறிய

Chennai ; வீடு பத்திர பதிவின் போது கள ஆய்வு தாமதம் , எதனால் சிக்கல் ? தீர்வு என்ன

கட்டடத்தின் மதிப்பு சரியா என்பதை உறுதி செய்வதற்கான களஆய்வு உரிய காலத்தில் நடக்காததால் , பதிவு முடிந்தும் பத்திரங்களை பெற வீடு வாங்கியோர் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

பத்திரப்பதிவு - வழிகாட்டுதல் மதிப்பு

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள் 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில் நிலத்தின் மதிப்பானது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புக்கு இணையாக இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கட்டடம் இருந்தால் , அதற்கான மதிப்பையும் சரியாக குறிப்பிட வேண்டும். பொதுப்பணி துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு , இந்த மதிப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடம் எப்போது கட்டப்பட்டது. எந்த வகை பொருட்களால் கட்டப்பட்டது என்ற அடிப்படையில் , அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாது. விற்பனைக்கு வரும் சொத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பானது , அது கட்டப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில் , எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பார்த்து அதற்கேற்ப மதிப்பு கழிக்கப்படும். 

தவறான தொகை - வேறுபாட்டு தொகை வசூல்

பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டடத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களே கள ஆய்வு வாயிலாக உறுதி செய்யலாம். இதில் தவறான மதிப்பு குறிப்பிடப்பட்டது தெரிய வந்தால் வேறுபாட்டு தொகை வசூலிக்கப்படும்.

பத்திர எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால் , கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதாரணமாக , ஒரு அலுவலகத்தில் நாளில், 100 பத்திரங்கள் ஒரு வந்தால், அதில் , 50 - க்கும் மேற்பட்ட பத்திரங்கள், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

சார் - பதிவாளர்கள், தங்கள் வழக்கமான பதிவு பணிகளுக்கு இடையே , கட்டட கள ஆய்வுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதில், வேலைப்பளு அதிகமாக உள்ளதாக கூறி, பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரங்களை நிலுவையில் வைக்கின்றனர்.

இதனால், வீடு வாங்கி யோர் பதிவு முடிந்தாலும், பத்திரம் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க கள ஆய்வு பணியில் , உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் அல்லது பொறியாளர்களை பயன்படுத்த பதிவுத் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி கூறியதாவது ; 

மாநகராட்சி , நகராட்சி பகுதிகளில் , அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்பு , பொதுப்பணி துறை தள மதிப்பு பட்டியலுடன் பொருந்தும் நிலையில் இருந்தால் , அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள மதிப்புக்கும் வேறுபாடு உள்ள பத்திரங்களை மட்டும் கவனமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம்.

ஆனால் , சார் - பதிவாளர்கள் அனைத்து பத்திரங்களையும் இதைக் காரணமாக கூறி , தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. உரிய காரணம் இல்லாமல் , பத்திரங்களை கிடப்பில் போடும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

​கிளாம்பாக்கம் டூ செங்கல்பட்டு 15 நிமிடம் தான்! இனி ‘டபுள் டெக்கர்’! நெடுஞ்சாலைத் துறையின் மெகா பிளான்!
​கிளாம்பாக்கம் டூ செங்கல்பட்டு 15 நிமிடம் தான்! இனி ‘டபுள் டெக்கர்’! மெகா பிளான்!
சென்னை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! 41 மின்சார ரயில்கள் திடீர் ரத்து – மாற்று ஏற்பாடு என்ன?
சென்னை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! 41 மின்சார ரயில்கள் திடீர் ரத்து – மாற்று ஏற்பாடு என்ன?
TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
Embed widget