மேலும் அறிய

Chennai ; வீடு பத்திர பதிவின் போது கள ஆய்வு தாமதம் , எதனால் சிக்கல் ? தீர்வு என்ன

கட்டடத்தின் மதிப்பு சரியா என்பதை உறுதி செய்வதற்கான களஆய்வு உரிய காலத்தில் நடக்காததால் , பதிவு முடிந்தும் பத்திரங்களை பெற வீடு வாங்கியோர் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

பத்திரப்பதிவு - வழிகாட்டுதல் மதிப்பு

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள் 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில் நிலத்தின் மதிப்பானது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புக்கு இணையாக இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கட்டடம் இருந்தால் , அதற்கான மதிப்பையும் சரியாக குறிப்பிட வேண்டும். பொதுப்பணி துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு , இந்த மதிப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடம் எப்போது கட்டப்பட்டது. எந்த வகை பொருட்களால் கட்டப்பட்டது என்ற அடிப்படையில் , அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாது. விற்பனைக்கு வரும் சொத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பானது , அது கட்டப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில் , எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பார்த்து அதற்கேற்ப மதிப்பு கழிக்கப்படும். 

தவறான தொகை - வேறுபாட்டு தொகை வசூல்

பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டடத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களே கள ஆய்வு வாயிலாக உறுதி செய்யலாம். இதில் தவறான மதிப்பு குறிப்பிடப்பட்டது தெரிய வந்தால் வேறுபாட்டு தொகை வசூலிக்கப்படும்.

பத்திர எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால் , கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதாரணமாக , ஒரு அலுவலகத்தில் நாளில், 100 பத்திரங்கள் ஒரு வந்தால், அதில் , 50 - க்கும் மேற்பட்ட பத்திரங்கள், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

சார் - பதிவாளர்கள், தங்கள் வழக்கமான பதிவு பணிகளுக்கு இடையே , கட்டட கள ஆய்வுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதில், வேலைப்பளு அதிகமாக உள்ளதாக கூறி, பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரங்களை நிலுவையில் வைக்கின்றனர்.

இதனால், வீடு வாங்கி யோர் பதிவு முடிந்தாலும், பத்திரம் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க கள ஆய்வு பணியில் , உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் அல்லது பொறியாளர்களை பயன்படுத்த பதிவுத் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி கூறியதாவது ; 

மாநகராட்சி , நகராட்சி பகுதிகளில் , அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்பு , பொதுப்பணி துறை தள மதிப்பு பட்டியலுடன் பொருந்தும் நிலையில் இருந்தால் , அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள மதிப்புக்கும் வேறுபாடு உள்ள பத்திரங்களை மட்டும் கவனமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம்.

ஆனால் , சார் - பதிவாளர்கள் அனைத்து பத்திரங்களையும் இதைக் காரணமாக கூறி , தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. உரிய காரணம் இல்லாமல் , பத்திரங்களை கிடப்பில் போடும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
TN Roundup: திருச்செந்தூரில் தடை இல்லை, SIR திமுக ஆலோசனை, எடப்பாடி ஆவேசம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்செந்தூரில் தடை இல்லை, SIR திமுக ஆலோசனை, எடப்பாடி ஆவேசம் - தமிழகத்தில் இதுவரை
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Embed widget