Train Cancel: சென்னை பீச் To செங்கல்பட்டு ரயில்கள் ரத்து.. பயணிகளே உஷாரா பிளான் பண்ணுங்க..!
Chennai Train Cancel: செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Chennai Beach To Chengalpattu to Train Cancelled: சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை வருகின்ற 22 ஆம் தேதி 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
சென்னை மின்சார ரயில் சேவை - Chennai Electric Trains
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அதேபோன்று இதற்கு மறு மார்க்கமாக இயக்கக்கூடிய செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் சேவைகள் சென்னையில் மிகப் பிரதான ரயில் சேவையாக உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய ரயில் சேவையாக உள்ளது.
அதேபோன்று திருவள்ளூர் - சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய ரயில் சேவைகளும் மிக முக்கிய ரயில் சேவைகளில் ஒன்றாக உள்ளது. குறைந்த விலையில் பயணம் செய்யலாம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இந்த ரயில் சேவைகள் உள்ளன. அவ்வப்போது இந்த ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக, ரத்து செய்யப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
பராமரிப்பு பணிகள்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது, ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வருகின்ற 22 ஆம் தேதி சனிக்கிழமை, பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு தடத்தில் இயக்கக்கூடிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்: Chennai Train Cancel Details
இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் வெளியாகி உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கிண்டி ரயில்வே தடத்தில் வருகின்ற 22 ஆம் தேதி இரவு 11:15 முதல் மறுநாள் அதிகாலை 4:45 மணி வரை ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை இரவு 10:10 மணிக்கு செல்லும் ரயில்கள் வரும் 22ஆம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரை வரை இரவு 10:40 மணிக்கு செல்லும் ரயில்கள் வரும் 22ஆம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரைக்கு இரவு 11:15 மணிக்கு செல்லும் ரயில்கள் வரும் 22ஆம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை Tambaram Train Cancelled
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் 3:55, 4:15, கடற்கரை முதல் தாம்பரம் வரை அதிகாலை 4:15 மணிக்கு செல்லும் ரயில்கள் வரும் 23ஆம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் 6:15 மணிக்கு ரயில்கள் வரும் நிலையில் 23ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை மாலை 6:46 செல்லும் ரயில் வரும் 23ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இரவு 7:38, 10:20 மற்றும் 11:30 ரயில்கள் வரும் 22 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் அதற்கேற்றவாறு பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





















