மேலும் அறிய

Crime: வனத்துறையால் கைது செய்யப்பட்ட பூசாரி..குவிந்த பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

கோயில் பூசாரியை கைது செய்ததை கண்டித்து , கிராம மக்கள் வன சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள, அனுமந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தர்காஸ் வனப்பகுதியில் , ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. அனுமனின் காலடி தடம் பட்டதால் இந்த ஊருக்கு அனுமந்தபுரம் என பெயர் வந்ததாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அப்பகுதியில் கோயில் சுமார் நூறாண்டுகளுக்கு மேலாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இஷ்ட தெய்வமாக இந்த கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் விளங்கி வருவதாகவும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் ஆரத்தி செய்த பின்பு தான் சுப நிகழ்ச்சிகளை தொடங்குவதும் தங்களுடைய பணி எனவும் அப்பகுதி மக்கள்  தெரிவித்து வருகின்றனர். 

Crime: வனத்துறையால் கைது செய்யப்பட்ட பூசாரி..குவிந்த பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு
 
வனப்பகுதியில் இந்த கோயில் இருப்பதால், வனத்துறையின் அனுமதி இல்லாமல் இந்த கோவில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலுக்கு பூசாரியாக, தர்காஸ் பகுதியில் சேர்ந்த, எத்திராஜ் என்பவரின் மகன் பார்த்தசாரதி (41) இருந்து வருகிறார். அவ்வப்பொழுது இந்த கோயிலுக்கு ஊர் மக்கள் சார்பில் திருப்பணிகள் மேற்கொள்வது வழக்கம். அவர் மேற்கொள்ளும் பொழுது வனத்துறையினர் எந்த அனுமதியும் பெறுவதில்லை என்பது நீண்ட நாளாக குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அவ்வப்போது கிராம மக்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறி வனத்துறை அலுவலர்கள் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால், பொதுமக்களை மிரட்டி லஞ்சம் பெற்று வந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக தர வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  

Crime: வனத்துறையால் கைது செய்யப்பட்ட பூசாரி..குவிந்த பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு
 
இந்த நிலையில் கோவில் , பூசாரியாக பணியாற்றி வந்த பார்த்தசாரதி நேற்று காலை 5 மணியளவில் வனத்துறை அலுவலர்கள் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கி கைது செய்ததாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், திடீரென வனச்சரக அலுவலகத்தை கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு வனத்துறை சார்பில், அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வனத்திற்கு நுழைந்தது வனத்திற்கு சேதம் வெளியிட்டது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து செங்கல்பட்டு வன சரக அலுவலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, ஏற்கனவே இந்த பகுதியில் அனுமதியில்லாமல் கட்டுமானம் கட்டப்பட்டது எனவும், இது குறித்து பலமுறை எச்சரிக்கை கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget