மேலும் அறிய

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு: "Home Sick காரணமாக தற்கொலை" : சிபிஐ இறுதி அறிக்கை!

பாத்திமா எழுதிய தற்கொலை கடிதத்தில் வேறு எந்த பேராசிரியர் பெயரும் இல்லாமல் ஒருவரது பெயரை மட்டும் எழுதியிருந்ததற்கு சிபிஐ பதில் கூறவில்லை.

19 வயது மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தற்கொலை என்று இறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டை விட்டு தூரமாக வந்த காரணத்தால் ஏற்பட்ட மனவுளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சிபிஐ கூறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஐஐடி வளாகத்தில் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவானது. பாத்திமாவின் இறப்புக்கு ஒரு பேராசிரியர் கொடுத்த அழுத்தம் காரணம் என அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த வழக்கை முறையாக விசாரிக்கவேண்டும் என பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல்கட்சியினர், பாத்திமாவின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் அவரது மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என போராட்டம் நடத்தினர். கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் 2019 ஆம் ஆண்டு நவம்பர்15ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு:

விசாரணைக் குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகளான ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். தனது மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள் என உறுதியாக நம்புவதாக கூறிய தந்தை லத்தீப் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக டிஜிபி உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்புகளில் தனக்கு நம்பிக்கைஇருப்பதாக தெரிவித்திருந்தார். அதே ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் லத்தீப் குடும்பத்தினர், பிரதமர் மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்து சிபிஐ விசாரணை தேவை என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் பிறகு டிசம்பர் 2019ல் சிபிஐ விசாரணையை தொடங்கியிருந்தது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகும், ஆய்வுகளுக்கு பிறகும் இன்று இறுதி அறிக்கையை சமர்பித்தது. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் 'ஹோம்சிக்' காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு:

இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள 2000 பக்க அறிக்கையில் பாத்திமாவின் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் சார்பாக வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் மொஹமது ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாத்திமா லத்தீப்பின் மரணத்தை தற்கொலை என்று கூறும் சிபிஐ அறிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி ஹியரிங் கொடுத்துள்ளது. அன்று எங்களது தீவிர எதிர்ப்பினை தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம். அந்த வார்டன் பாத்திமாவுக்கு வீட்டை விட்டு தூரமாக வந்ததன் காரணமாக உளவியல் சிக்கல்கள் இருந்ததாக கூறுவதிலேயே குறியாக இருக்கிறார்.

சிபிஐ அவருடைய கருத்தை முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் பாத்திமா எழுதிய தற்கொலை கடிதத்தில் வேறு எந்த பேராசிரியர் பெயரும் இல்லாமல் ஒருவரது பெயரை மட்டும் எழுதியிருந்ததற்கு சிபிஐ பதில் கூறவில்லை. அதற்கான பதில்களை கேட்போம்" என்று கூறியிருக்கிறார். சென்னை ஐஐடி சாதிய பாகுபாடுகளை கொண்டிருப்பதாகவும், மற்ற சாதியினர் அங்கு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து பல செய்திகள் இத்தனை வருடத்தில் வந்துவிட்டன. பேராசிரியர் வசந்தா கந்தசாமி தொடங்கி விபின் வரை பலர் வேலையை விட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget