மேலும் அறிய

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

முதலமைச்சர் அறிவித்திருந்த கோதுமை மாவு, உப்பு, கடுகு , சீரகம் , சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு,  மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல்  சோப் உள்ளிட்ட 14  பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியும் நேற்று முன்தினம் முதல்  தொடங்கியது. 

கொரோனா நோயின் இரண்டாம் அலையின் தீவிரத்தால் பெரும்பாலான பொதுமக்கள் வேலையிழந்து வறுமையில் வாடிவந்த சூழ்நிலையில் , தமிழக முதல் அமைச்சராக மு க ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  தொகுப்புகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என்று அறிவித்திருந்தார் .

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,29,234  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , 698 நியாய விலை கடைகள் மூலம் கடந்த மே மாதம் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.  இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினம் முதல் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியும் தொடங்கியது.


Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

இதனுடன் முதலமைச்சர் அறிவித்திருந்த கோதுமை மாவு, உப்பு, கடுகு , சீரகம் , சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு,  மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் சோப் உள்ளிட்ட 14  பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியும் நேற்று முன்தினம் முதல்  தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் , பொருட்கள் பற்றாக்குறையால் , இன்று வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கங்கே வழங்கப்படும் ஒருசில இடங்களில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் ஒருவர் கூறுகையில் வேலூர் , ஓல்டு டவுன் பில்டர்பெட் ரோடு அருகே இயங்கிவரும் நியாய விலை கடையில் வழங்கப்படும் இலவச தொகுப்பு பொருட்களில் , தொடர்ந்து சில பொருட்கள் விடுபடுவதாக புகார் தெரிவித்தார் .


Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

இதுகுறித்து , ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் கூறுகையில், பில்டர்பெட் ரோடு ரேஷன் கடையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக , வழங்கப்பட்டு 14 வகை இலவச தொகுப்பில் சீரகம், கடுகு, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் உள்ளது. இது எனக்கு மட்டும் இல்லை என்னுடன் நேற்று கடையில் பொருள் வாங்கின 10-க்கும் மேற்பட்டோர்க்கு இதே நிலைதான். இதுகுறித்த அந்த கடை சேல்ஸ்மேனை கேட்டல், “வரும் பொழுதே பொருட்கள் ஒன்னு ரெண்டு கம்மியாதான் வருது" என்று மூஞ்சால் அடிச்சதுபோல் பதில் கூறுகிறார் என்று தெரிவித்தார் .  

இது குறித்து விசாரிக்க மாவட்ட வட்டல் வழங்க அலுவலர் காமராஜை தொடர்புகொண்டபொழுது , மொத்தமுள்ள 4 .30 லட்சம் அரிசி குடும்ப அட்டைதார்களில் , இது வரை 50 சதவீத அட்டைதார்களுக்கு பணம் மற்றும் தொகுப்பு பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தொகுப்பு பொருட்கள் பற்றாக்குறையால் இன்று ஒருசில நியாய விலை கடைகளில் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இன்று 75000 குடும்ப அட்டைதாரர்களுக்கான தொகுப்பு வந்துள்ளது என்றும் இதனை நாளையில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் ஓல்டுடவுன் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடை மீதான  குற்றச்சாட்டை பற்றி கேட்டபொழுது, “இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்துகொண்டு தான் இருக்கிறது . மொத்தமாக வரப்பட்ட பொருட்களை  பிரித்து 14 தொகுப்பாக பேக் செய்யும்பொழுது, ஒன்று இரண்டு பொருட்கள், கவனக்குறைவாகவோ அல்லது தவறுதலாகவோ விடுபடுவதற்கு சாத்தியம் அதிகம் இருக்கும் சூழ்நிலையில், பொதுமக்கள் தொகுப்புக்களை வாங்கும்பொழுதே நியாய விலை கடைகளில் வைத்தே சரி பார்த்துபிறகு எடுத்து செல்லவேண்டும். வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டு திரும்பி வந்து முறையிட்டால் எப்படி நியாயமாகும். எனினும் அந்த குறிப்பிட்ட நியாய விலை கடை ஊழியரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்று தெரிவித்தார். "எப்படியும் எங்களுக்கு விடுபட்ட பொருட்கள் திரும்பக்கிடைக்க போவதில்லை" என்று புலம்புகின்றனர், வேதனையில் பொதுமக்கள் .

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget