மேலும் அறிய

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

முதலமைச்சர் அறிவித்திருந்த கோதுமை மாவு, உப்பு, கடுகு , சீரகம் , சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு,  மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல்  சோப் உள்ளிட்ட 14  பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியும் நேற்று முன்தினம் முதல்  தொடங்கியது. 

கொரோனா நோயின் இரண்டாம் அலையின் தீவிரத்தால் பெரும்பாலான பொதுமக்கள் வேலையிழந்து வறுமையில் வாடிவந்த சூழ்நிலையில் , தமிழக முதல் அமைச்சராக மு க ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  தொகுப்புகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என்று அறிவித்திருந்தார் .

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,29,234  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , 698 நியாய விலை கடைகள் மூலம் கடந்த மே மாதம் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.  இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினம் முதல் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியும் தொடங்கியது.


Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

இதனுடன் முதலமைச்சர் அறிவித்திருந்த கோதுமை மாவு, உப்பு, கடுகு , சீரகம் , சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு,  மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் சோப் உள்ளிட்ட 14  பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியும் நேற்று முன்தினம் முதல்  தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் , பொருட்கள் பற்றாக்குறையால் , இன்று வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கங்கே வழங்கப்படும் ஒருசில இடங்களில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் ஒருவர் கூறுகையில் வேலூர் , ஓல்டு டவுன் பில்டர்பெட் ரோடு அருகே இயங்கிவரும் நியாய விலை கடையில் வழங்கப்படும் இலவச தொகுப்பு பொருட்களில் , தொடர்ந்து சில பொருட்கள் விடுபடுவதாக புகார் தெரிவித்தார் .


Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

இதுகுறித்து , ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் கூறுகையில், பில்டர்பெட் ரோடு ரேஷன் கடையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக , வழங்கப்பட்டு 14 வகை இலவச தொகுப்பில் சீரகம், கடுகு, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் உள்ளது. இது எனக்கு மட்டும் இல்லை என்னுடன் நேற்று கடையில் பொருள் வாங்கின 10-க்கும் மேற்பட்டோர்க்கு இதே நிலைதான். இதுகுறித்த அந்த கடை சேல்ஸ்மேனை கேட்டல், “வரும் பொழுதே பொருட்கள் ஒன்னு ரெண்டு கம்மியாதான் வருது" என்று மூஞ்சால் அடிச்சதுபோல் பதில் கூறுகிறார் என்று தெரிவித்தார் .  

இது குறித்து விசாரிக்க மாவட்ட வட்டல் வழங்க அலுவலர் காமராஜை தொடர்புகொண்டபொழுது , மொத்தமுள்ள 4 .30 லட்சம் அரிசி குடும்ப அட்டைதார்களில் , இது வரை 50 சதவீத அட்டைதார்களுக்கு பணம் மற்றும் தொகுப்பு பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தொகுப்பு பொருட்கள் பற்றாக்குறையால் இன்று ஒருசில நியாய விலை கடைகளில் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இன்று 75000 குடும்ப அட்டைதாரர்களுக்கான தொகுப்பு வந்துள்ளது என்றும் இதனை நாளையில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் ஓல்டுடவுன் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடை மீதான  குற்றச்சாட்டை பற்றி கேட்டபொழுது, “இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்துகொண்டு தான் இருக்கிறது . மொத்தமாக வரப்பட்ட பொருட்களை  பிரித்து 14 தொகுப்பாக பேக் செய்யும்பொழுது, ஒன்று இரண்டு பொருட்கள், கவனக்குறைவாகவோ அல்லது தவறுதலாகவோ விடுபடுவதற்கு சாத்தியம் அதிகம் இருக்கும் சூழ்நிலையில், பொதுமக்கள் தொகுப்புக்களை வாங்கும்பொழுதே நியாய விலை கடைகளில் வைத்தே சரி பார்த்துபிறகு எடுத்து செல்லவேண்டும். வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டு திரும்பி வந்து முறையிட்டால் எப்படி நியாயமாகும். எனினும் அந்த குறிப்பிட்ட நியாய விலை கடை ஊழியரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்று தெரிவித்தார். "எப்படியும் எங்களுக்கு விடுபட்ட பொருட்கள் திரும்பக்கிடைக்க போவதில்லை" என்று புலம்புகின்றனர், வேதனையில் பொதுமக்கள் .

தலைப்பு செய்திகள்

வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
​"மனிதநேயம் இன்னும் சாகலப்பா.." தாம்பரம் அரசு பஸ் டிரைவர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுகள்!
" எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க " மனைவி மீது சந்தேகம் - இறுதியில் நடந்ந சோகம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget