மேலும் அறிய

எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் - கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ கைது

’’வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்’’

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை கடந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் முழு அடைப்பையும் போராட்டத்தையும் நடத்த 19 எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து இன்றைக்கு நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அன்றாட பணிகளை விடுத்து இதற்கு ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
 
எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் - கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ கைது
 
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் பிற இடங்களில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக நிற்கிறது என திமுகவின் மாநில விவசாய பிரிவு தலைவர் என்.கே.கே.பெரியசாமி கூறினார். மேலும் மத்திய அரசு எதேச்சதிகாரமாக செயல்படுகிறது, விவசாயிகளை ஒருபோதும் கவனிக்கவில்லை. தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொது மக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து சமூக அமைப்புகளும் இந்த பந்த்-ல் பங்கேற்று முழுமையான வெற்றியை பெற வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 

எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் - கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ கைது
அதன் அடிப்படையில் கடலூரில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன அதன்படி கடலூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன மேலும் 80 சதவிகித பேருந்துகள் இயங்கி வருகின்றன, அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது அதில், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா பாலத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான  விசிக, தவாக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது அதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் என 100 கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் - கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ கைது
 
அப்பொழுது மத்திய அரசின் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன பின் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறை கைது செய்தது அப்பொழுது கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கைது செய்ப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். அண்ணா பாலத்தில் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget