மேலும் அறிய

ஜெயலலிதாவின் உயிலை வெளியிட போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில்  வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வில்லாக்களுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
 
இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு  ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு,  விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

மற்றொரு வழக்கு
 
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்   கை ரேகை பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும்  காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
 
குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டம், 2022ம் ஆண்டும் ஏப்ரல் 18ம் தேதி   அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது.
 
இந்த சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
அதில், மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில்  எந்த சட்டமும் இயற்ற முடியாது எனவும், அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை என்றும், இதுசம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது என்றும் இயற்கை நீதிக்கு முரணானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, ஆறு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! வழித்தடங்களில் மாற்றம் அறிவித்த தெற்கு ரயில்வே
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! வழித்தடங்களில் மாற்றம் அறிவித்த தெற்கு ரயில்வே
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Best Selling Car: SUVக்களால கூட தொட முடியலை - மாருதியோட செடான் கார்ல அப்படி என்ன தான் இருக்கு - NO.1 எப்படி?
Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
“இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
Embed widget