மேலும் அறிய

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

செம்பாக்கம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கான  பசுமை வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட செம்பாக்கம் ஊராட்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்விளக்கு சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிதண்ணீர் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 56 குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு  சூரிய ஒளியுடன் கூடிய ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வீடுகளை பழங்குடியினரால் கட்ட முடியாது என்ற நிலையில்  ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டப்படுகிறது. தற்போது தளம் போடும் நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப் பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வீடு கட்டப்பட்டு வரும் இடத்தில் தண்ணீர் வசதி முற்றி லும் இல்லாத நிலையில் ஒப்பந்ததாரர்கள் வெளியிலிருந்து தண்ணீரை  வாகனங்கள் மூலம் கொண்டுவந்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். கட்டப்பட்ட கட்டங்களுக்கு போதிய அளவு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்தாததாலும், குறைந்த அளவில்  சிமெண்ட் கலவையை பயன்படுத்தியதாலும்  கட்டிமுடிக்கப்பட்ட சுவர்களை  கையால் தேய்த்தாலே  கலவைகள் கரைந்துகொட்டும் நிலையில் உள்ளது. தற்போது வேகவேகமாக தளம்போடும் பணிகள் நடைபெற்று வருவதால் இரண்டு ஆண்டுகளில் வீடுகள் சேதமடையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிதண்ணீருக்காக மட்டும் ஒரே ஒரு அடிபம்பு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த  ஒரேயொரு அடிபம்ப்பையே 60-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்த  வேண்டியுள்ளது. இதில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தை வலுப்படுத்த  தண்ணீர் ஊற்றச் சொல்கின்றனர் குடி தண்ணீருக்கு வழியில்லாத சூழ்நிலையில் புதிய கட்டடத்திற்கு எவ்வாறு தண்ணீர் ஊற்ற முடியும்.  எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து  செல்வம் கூறுகையில், பல ஆண்டுகளாக வீடுகளின்றி  இருக்கும் இருளர் மக்களுக்கு அரசு  வீடு கட்டித் தருவது வரவேற்கத்தக்கது ஆனால் அந்த வீடுகளை தரமற்ற  முறையில் ஒப்பந்ததாரர் கட்டி வருவது வருத்தம் அளிக்கிறது. சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லாத நிலையில் புதிதாக கட்டிவரும் வீடுகளுக்கு தண்ணீர்  ஊற்ற ஒப்பந்ததாரர் வலியுறுத்துவதால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம். தலையிட்டு வீடுகளை தரமாக கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபொழுது, உடனடியாக  நடவடிக்கை எடுத்து குடிநீர் மற்றும் கட்டிட வேலைக்கும் தண்ணீர் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget