மேலும் அறிய

சென்னையில் ரோட்ல ஸ்பீடா போகாதீங்க! ஒரே நாளில் எகிறிய அபராதம் - இனி கவனமா போங்க!

சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறி பயணம் செய்ததற்காக முதல் நாளே ரூ.12 ஆயிரத்து100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Chennai: சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறி பயணம் செய்ததற்காக முதல் நாளே ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாடு:

 தலைநகர் சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். இப்படி சாலைகளில் டிராபிக் அதிகரிப்பதால் விரைவாக ஒரு இடத்திற்குச் சென்று சேர முடியவில்லை.

இதனால் சென்னையில் பலரும் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள்.  இதனால் சென்னையில் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே நாட்டில் அதிக வாகன விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.

ஏற்கனவே, சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி உடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. மேலும், விபத்துகளை குறைக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

அபராதம் விதிப்பு:

வேகக் கட்டுப்பாடு விதிமுறை அமலுக்கு வந்த ஒரே நாளில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேகக் கட்டுப்பாடு விதியை  மீறிய நான்கு கார்கள், 117 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் கூறியதாவது, "சென்னையில் வாகனங்களை வேகமாக ஒட்டியதாக 120 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேக கட்டுப்பாடு அமலில் உள்ளது. பெரும்பாலானோர் வேக கட்டுப்பாடு  முறையை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தனர். ஸ்பீட் ரேடார் கன் (Rador Gun) எனப்படும் அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வுகளுக்கு பிறகே வாகன வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

எவ்வளவு வேகத்தில் செல்லலாம்?

பெருநகர சென்னையில் உள்ள சாலைகளில் இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகவேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 2 ஆயிர ரூபாயும் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே,  வாகன ஓட்டிகள் இந்த புதிய வேக வரம்பைக் கடைபிடிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget