மேலும் அறிய

சென்னையில் ரோட்ல ஸ்பீடா போகாதீங்க! ஒரே நாளில் எகிறிய அபராதம் - இனி கவனமா போங்க!

சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறி பயணம் செய்ததற்காக முதல் நாளே ரூ.12 ஆயிரத்து100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Chennai: சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறி பயணம் செய்ததற்காக முதல் நாளே ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாடு:

 தலைநகர் சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். இப்படி சாலைகளில் டிராபிக் அதிகரிப்பதால் விரைவாக ஒரு இடத்திற்குச் சென்று சேர முடியவில்லை.

இதனால் சென்னையில் பலரும் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள்.  இதனால் சென்னையில் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே நாட்டில் அதிக வாகன விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.

ஏற்கனவே, சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி உடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. மேலும், விபத்துகளை குறைக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

அபராதம் விதிப்பு:

வேகக் கட்டுப்பாடு விதிமுறை அமலுக்கு வந்த ஒரே நாளில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேகக் கட்டுப்பாடு விதியை  மீறிய நான்கு கார்கள், 117 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் கூறியதாவது, "சென்னையில் வாகனங்களை வேகமாக ஒட்டியதாக 120 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேக கட்டுப்பாடு அமலில் உள்ளது. பெரும்பாலானோர் வேக கட்டுப்பாடு  முறையை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தனர். ஸ்பீட் ரேடார் கன் (Rador Gun) எனப்படும் அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வுகளுக்கு பிறகே வாகன வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

எவ்வளவு வேகத்தில் செல்லலாம்?

பெருநகர சென்னையில் உள்ள சாலைகளில் இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகவேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 2 ஆயிர ரூபாயும் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே,  வாகன ஓட்டிகள் இந்த புதிய வேக வரம்பைக் கடைபிடிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget