மேலும் அறிய

கடலூரில் மக்காச்சோளத்தை தின்றதால் 5 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

’’மக்காச்சோளத்தை மயில் சேதப்படுத்தியதால் குருணை மருந்தை மக்காச்சோளம் விதைத்து இருந்த நிலத்தில் தூவியுள்ளது தெரியவந்தது’’

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பகுதியில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் தற்போது பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களை விதைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மான், மயில், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் விவசாயிகளின் விளை பயிர்களை தின்று நாசம் செய்வது உண்டு. அதற்காக இரவு நேரங்களில் விவசாயிகள் காவல் காத்து வருவார்கள்.
 
தற்போது விதை விதைக்கும் காலம் நடந்து வருவதால் இப்பகுதி காடுகளில் வாழும் மயில்கள் விவசாயிகள் விதைத்த மக்காச்சோளத்தை பூமியிலிருந்து கொத்தி தின்று வருகின்றன. இடைச்செருவாய் பாளையம் பகுதியில் விவசாயிகள் விதைத்த மக்காச்சோளத்தை ரசாயனம் கலந்து விதைத்துள்ளனர். இதற்கு காரணம் பூமியில் விதைத்தவுடன் அந்த விதையை பூச்சிகள் வண்டுகள் தின்றுவிடக்கூடாது என்பதற்காக ரசாயனம் கலந்து விதைத்துள்ளனர். அப்படி விதைக்கப்பட்ட விதையை நேற்று முன்தினம் அப்பகுதி காடுகளில் வாழ்ந்து வரும் மயில்கள் அந்த மக்காச்சோள விதைகளை தங்களது கூர்மையான மூக்கால் பூமியில் இருந்து தோண்டி தின்றுள்ளன.
 
கடலூரில் மக்காச்சோளத்தை தின்றதால் 5 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது
 
மக்காசோள விதையைத் தின்ற ஐந்து மயில்கள் துடிதுடித்து இறந்து கிடந்துள்ளன. இந்த தகவல் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தர், கிராம உதவியாளர் கொளஞ்சி மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மயில்கள் இறந்து கிடந்த இடத்திற்கு வன அலுவலர் ரவி, வனவர்கள் சங்கர், பாலகிருஷ்ணன் விரைந்து சென்று மயில்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பிறகு அடக்கம் செய்தனர். இது குறித்து அவர்கள் தீவிர விசாரணையில் பாளையத்தைச்சேர்ந்த பெருமாள் மகன் சந்திரன் (58) தனது வயலில் விதைத்திருந்த மக்காச்சோளத்தை மயில் சேதப்படுத்தியதால் குருணை மருந்தை மக்காச்சோளம் விதைத்து இருந்த நிலத்தில் தூவியுள்ளது தெரியவந்தது. இதனை சாப்பிட்ட ஒரு பெண் மயில் உட்பட 5 மயில்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளது.  
 
தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இறந்த மயில்களை இடைச்செருவாயில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மெயில்களை உடற்கூறு ஆய்வு செய்து தடையங்களை விழுப்புரத்தில் உள்ள தடைய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். குருணை மருந்து வைத்து மயில்களை கொன்ற விவசாயி சந்திரனை கைது செய்து திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கொல்லப்பட்ட மயில்கள் காப்புக்காட்டில் புதைக்கப்பட்டன. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதனின் சாதனை! கணினி அறிவியல் மையத்திற்கு பெயர் சூட்டல்
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதனின் சாதனை! கணினி அறிவியல் மையத்திற்கு பெயர் சூட்டல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Embed widget