மேலும் அறிய

Practical Exams: 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நேரம் குறைப்பு - முக்கிய விதிமுறைகள் வெளியீடு

11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகள் இரண்டு சுற்றுகளாக ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ விவரம்‌:

25.04.2022 முதல் 28.04.2022 (வியாழன்‌) வரை

28.04.2022 (வியாழன்‌) முதல்‌ 02.05.2022 (திங்கள்‌) வரை.

 

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

'' 11ஆம்‌ மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகளை எந்தவித புகார்களுக்கு இடம்‌ அளிக்காமல்‌ நடத்த முதன்மை கண்காணிப்பாளர்களான செய்முறைத்‌ தேர்வு மைய பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதல்வர்கள்‌ அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌.

செய்முறைத்‌ தேர்வு விதிமுறைகள்‌

1. செய்முறைத்‌ தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்‌ மாதிரி வினாத்தாள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ ஒதுக்கீடு பாடவாரியாக சென்னை முதன்மைக்‌ கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம்‌ செய்யப்பட்‌டுள்ளது.

2. செய்முறைத்‌ தேர்வுகள்‌ கீழ்‌க்காணும்‌ கால அட்டவணையின்படி நடத்த அறிவுறுத்தப்படுகிறது. 

பேட்ச் 1: காலை 8.00 மணி முதல்‌ 10.00 மணி வரை

பேட்ச் 2: காலை 10.15 மணி முதல்‌ 1215 மணி வரை

பேட்ச் 3: பிற்பகல்‌ 12.45 மணி முதல்‌ மாலை 2.45 மணி வரை

பேட்ச் 4: மாலை 3.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை.

3. ஒரு பேட்ச்சுக்கு 25 முதல்‌ அதிகபட்சம்‌ 30 மாணவர்களுக்கு வரை செய்முறைத்‌ தேர்வு நடத்தலாம்‌.

4. ஒரு பாடத்தில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை 120 மற்றும்‌ அதற்குக் கீழ்‌ இருப்பின்‌ ஒரே நாளில்‌ அப்பாடத்தின்‌ செய்முறைத்‌ தேர்வு முடிக்கப்பட வேண்டும்‌. (நாள்‌ ஒன்றுக்கு 4 பேட்ச்கள்‌ நடத்தப்பட வேண்டும்‌)

5. மாணவர்‌ எண்ணிக்கை கூடுதலாக உள்ள பள்ளிகளுக்கு ஒரு பாடத்திற்கு 2 புறத்தேர்வர்கள்‌ நியமிக்கப்பட்டிருப்பர்‌. 25.04.2022 முதல் 02.04.2022-க்குள்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ (11 மற்றும்‌ 12) செய்முறைத்‌ தேர்வுகள்‌ முடிக்கப்படுமாறு திட்டமிடப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்‌.

6. செய்முறைத்‌ தேர்வுக்கான கால அளவு 2மணி நேரமாக மாற்றப்பட்‌டுள்ளது.

7. புறத்தேர்வர்கள்‌ செய்முறைத்‌ தேர்வு நடைபெறுவதற்கு முன்பே புறத்தேர்வராக நியமிக்கப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ அகத்‌ தேர்வாளர்களுடன்‌ அறிவியல்‌ ஆய்வக உபகரணங்களுக்கேற்ப செய்முறைத்‌ தேர்வுக்கான வினாத்தாட்களை தீர்மானித்துக்‌ கொள்ளலாம்‌.

8. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களான தலைமையாசிரியர்‌,முதல்வர்கள்‌ செய்முறைத்‌ தேர்வு நியமன ஆணையின்பம அந்தந்த புறத்தேர்வர்களை தேர்வு தொடங்குவதற்கு ஒரு நாள்‌ முன்னதாகவே விடுவிக்க வேண்டும்‌.

9. எக்காரணம்‌ கொண்டும்‌ புறத்தேர்வர்களுக்கான நியமன ஆணை ரத்து செய்யப்படாது.

10. செய்முறைத்‌ தேர்வு நடைபெறும்‌ நாட்களில்‌ விடைத்தாட்கள்‌ அன்றே திருத்தப்பட்டு மதிப்பெண்‌ பட்டியல்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

11. விடைத்தாள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியலை முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்‌.

12. தேர்வு முடிந்தபின்‌ மதிப்பெண்‌ பட்டியலை நோடல்‌ மையத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

13. செய்முறைத்‌ தேர்வில்‌ (அக மற்றும்‌ புறத்தேர்வு) வழங்கப்பட்ட மதிப்பெண்களைப் பதிவேடுகளில்‌ எழுதி முதன்மைக்‌ கண்காணிப்பாளரின்‌ பொறுப்பில்‌ வைத்துக்‌கொள்ள வேண்டும்‌. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ அல்லது புறத்தேர்வாளர்‌ அல்லது அகத்தேர்வாளர்‌ எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ அக/ புறத்தேர்வு மதிப்பெண்களை வெளியிடக்‌ கூடாது.

14. புறத்தேர்விற்கு வராத மாணவர்களுக்கு அக மதிப்பெண்கள்‌ இருந்தால்‌ வழங்க வேண்டும்‌. அகமதிப்‌பெண்கள்‌ இல்லாத பட்சத்தில்‌ “AA” என்றும்‌ புறத்தேர்விலும்‌  “AA” என்றும்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ வரிசையில்‌ “AAA”‌ என்றும்‌ பதிவிட வேண்டும்‌.

15. மதிப்பெண்‌ பட்டியலில்‌ கையெழுத்திடுவதற்கு முன்பாக முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ மதிப்பெண்கள்‌ மற்றும்‌ அக,புறத்‌ தேர்வாளர்களின்‌ கையெழுத்துகள்‌ சரியான இடங்களில்‌ உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்‌.

16. தேர்வுகள்‌ முடிந்தபின்‌ அனைத்து மதிப்பெண்‌ பட்டியல்களை ஒரே உறையில்‌ வைக்க வேண்டும்‌. (Legal Size Green Cloth Cover) 

17. வருகைச் சான்றிதழ்‌ அந்தந்த மையங்களில்‌ பாதுகாக்கப்பட வேண்டும்‌. நோடல்‌ மையங்களுக்கு அனுப்பத் தேவையில்லை.

18. நோடல்‌ மையங்களுக்கு அனுப்ப வேண்டிய உறைகள்‌ பின்வருமாறு:

* பொது மற்றும்‌ தொழிற்கல்விகளுக்கான அனைத்து செய்முறைத்தேர்வு மதிப்பெண்‌ பட்டியல்கள்‌ பாட வாரியாகவும்‌, பேட்ச் வாரியாகவும்‌ கட்டப்பட்டு நீண்ட பச்சைநிற துணி உறையில்‌ Log Sheetஉடன்‌ வைக்கவேண்டும்‌. ( தேர்வு மைய பள்ளிகள்‌ மற்றும்‌ இணைப்பு பள்ளிகளுக்கு
தனித்தனி உறைகள்‌ அமைக்க வேண்டும்‌.)

* படிவம்‌ ஏ மற்றும்‌ படிவம்‌ பி ஆகியவற்றின்‌ நகல்களை ஒப்படைக்க வேண்டும்‌.

19. மதிப்பெண்‌ பட்டியலில்‌ காணக்‌ கூடிய பிழைகள்‌ (கடந்த வருடம்‌)

* அக மதிப்பெண்கள்‌ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால்‌ புற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ மொத்த மதிப்பெண்கள்‌ பதிவிடப்படவில்லை.

* மதிப்பெண்‌ பட்டியலில்‌ கையெழுத்துகள்‌ (அக, புறத்தேர்வாளர்கள்‌ மற்றும்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌.) விடுபட்டிருந்தது.

20. ஒரு பாடத்திற்கான பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மதிப்பெண்‌ பட்டியலை வேறொரு பாடத்திற்குப் பயன்படுத்தக்‌கூடாது''.

இவ்வாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? -உயர்நீதிமன்றம் கேள்வி !
நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? -உயர்நீதிமன்றம் கேள்வி !
பெரிய கட்சிகளுக்கு முன்னுரிமை தருவதில் என்ன தவறு? - தவெகவுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
பெரிய கட்சிகளுக்கு முன்னுரிமை தருவதில் என்ன தவறு? - தவெகவுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
Embed widget