மேலும் அறிய

ரூ.100 கோடி நில ஆக்கிரமிப்பு; அதிமுக நிர்வாகியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

குன்றத்தூர் அருகே பணிக்காக தானம் கொடுத்த இடத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன் பட்டா மாற்றி 100 கோடி ரூபாய் நிலம் மோசடி என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தினை சாலைப் பணிக்காக படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தானமாக பத்திரப்பதிவு செய்து அளித்துள்ளார். அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த ஈ.வி.பி பெருமாள்சாமி என்பவர் அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். மேலும், தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தானம் அளித்த இடத்தில் பெருமாள்சாமி திருமண மண்டபம் கட்டி தொழில் செய்து ஆண்டு அனுபவித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

ரூ.100 கோடி நில ஆக்கிரமிப்பு; அதிமுக நிர்வாகியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!
இதுகுறித்து நிலத்தை தானம் வழங்கிய ராமகிருஷ்ணனின் மகன் பழனி, பலமுறை அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நில மோசடி விவகாரம் குறித்து ராமகிருஷ்ணன் மகன் பழனி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரசு பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு தானம் அளித்த நிலத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் ஈவிபி. பெருமாள் சாமி, பட்டா மாற்றி மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி நில ஆக்கிரமிப்பு; அதிமுக நிர்வாகியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!
 
இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நில உரிமையாளர் மகன் பழனி தனது தந்தை அரசுக்கு தானம் கொடுத்த இடத்தை முறைகேடு செய்து அனுபவித்து வரும் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், அவரின் திருமண மண்டபத்தை அரசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தன்னை ஆள் வைத்து மிரட்டும் பெருமாள் சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புகார் மனுவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி நில ஆக்கிரமிப்பு; அதிமுக நிர்வாகியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  அரசுக்கு அளிக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவை பெற்றுள்ளதாகவும் அந்த மனுவின் அடிப்படையில் நபர் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார் . மேலும் உடனடியாக இந்த மனுவின் மீது விசாரணை நடத்துமாறு கோட்டாட்சியரிடம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

ரூ.100 கோடி நில ஆக்கிரமிப்பு; அதிமுக நிர்வாகியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியின் பொழுது, போலி பட்டா மூலம் மோசடி செய்து அரசு நிலத்தை அரசுக்கே விற்று 200 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  தானம் கொடுத்த இடத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன்  பட்டா மாற்றி  100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget