மேலும் அறிய

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 82 ஏக்கர் நிலத்திற்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலை ,ஆறு வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது . இந்தச் சாலை விரிவாக்கத்தின் பொழுது ஸ்ரீபெரும்புதூரில் நிலம் எடுத்ததில்  தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது .
        

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆறு வழி சாலைக்காக சாலையை விரிவாக்கம் செய்யும்போது நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அவ்வாறு தனியார் மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும்போது அவற்றுக்கு  தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலமாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தன. 
 

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கள் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக வழங்க பட்ட 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள 70 பேரின் நிலங்களுக்கு 200 கோடி  வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா இல்லை என தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் கடந்த ஆண்டு தகவல் தெரியவந்தது இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய்த்துறையினர் இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டனர்.இதனடிப்படையில் வருவாய்த்துறையினர் பீமன் தாங்கள் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது  இல்லாத நிலங்களுக்கு இழப்பீடு பெற்றிருப்பது அம்பலமானது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொழுது அந்த நிலங்கள் யூ.டி.ஆர் என்ற அடிப்படை ஆவணங்களில் அனாதினம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதும் முறைகேடாக இழப்பீடு வழங்கப்பட்டது சில நிலத்திற்கு இரண்டு முறை இழப்பீடு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
இது தொடர்பாக தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பட்டாவே இல்லாத அரசு நிலங்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேலாக இழப்பீடு வாங்கிய தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட அலுவலராக இருந்த நர்மதா மீது தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தவிர ஓய்வு பெற்ற தாசில்தார் , இழப்பீடு வழங்கும் அதிகாரி சண்முகம் ,நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் ,தேன்மொழி நில அளவர் வரதராஜன் ஆகிய அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
 

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
அதேபோல் போலி பட்டாதாரர்களான அசோக் மேத்தா, செல்வம் விஜயராகவன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் அசோக் மேத்தா என்பவர் மட்டுமே தன்னுடைய நிலத்திற்கு 33 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில் மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.மொத்தம் 82 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா அந்த கிராமத்தில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
 
இந்த 82 ஏக்கர் நிலங்களில், நுாற்றுக்கணக்கான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்களின் நிலை தற்போது கேள்வி குறியாகியுள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget