மேலும் அறிய

Mark sheet: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; எப்படி?

10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பள்ளிகள் வாயிலாகவும், இணையம் மூலம் பெற முடியும். 

10, 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கடந்த ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்று காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எப்படிப் பதிவிறக்கம் செய்வது? 

தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌

மே 2022, பத்தாம்‌ வகுப்பு / பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வழுதிய பள்ளி மாணவர்கள்‌ 24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ வழியாகவும்‌, தனித் தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்‌ வழியாகவும்‌, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலைப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

இணையம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்

மேலும்‌, 24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ தங்களுக்கான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற www.dge.tn.nic.in இணையதளத்திலும்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


Mark sheet: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; எப்படி?

பத்தாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை

மே 2022, பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தாம்‌ தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்‌.

மே 2022 பத்தாம்‌ வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின்‌ மதிப்‌பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை தங்கள்‌ பள்ளி வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌-। விண்ணப்பிக்கும்‌ முறை

விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. அந்த வகையில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
India Pakistan Tension:
India Pakistan Tension: "அப்பாவி மக்களை குறிவைத்தது பாகிஸ்தான்.." நடந்ததை விளக்கமாக சொன்ன முப்படை அதிகாரிகள்!
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Embed widget