மேலும் அறிய

செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு

வெண்பாக்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

செங்கல்பட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டார்

 

 செங்கல்பட்டு விழிப்புணர்வு பேரணி

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் வெண்பாக்கம் பகுதியில், செயல்பட்டு வரும் அரசு பள்ளியிலிருந்து, தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி , மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்தப் பேரணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். 

 


செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு

 மதுவிற்கு எதிரான கோஷங்கள்

 

300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணையாக நடந்து சென்றனர். மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு போதை மற்றும் மதுவால் ஏற்படும் தீமையில் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 


செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு

 பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்


வெண்பாக்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக்கிய சாலையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பேரணி செங்கல்பட்டு திண்டிவனம் சாலை வழியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை இணைந்து செய்திருந்தனர்.


செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு

பொதுவாக விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சியர்கள் அல்லது அரசு துறை அலுவலர்கள் துவக்கி வைப்பது மட்டுமே வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சில பேரணிகளில் மட்டுமே அரிதாக மாவட்ட ஆட்சியர் அல்லது அரசு துறை அதிகாரிகளோ கலந்து கொள்வார்கள். ஆனால் இன்று நடைபெற்ற பேரணியில் மாணவ மற்றும் மாணவிகளுடன் கலந்து கொண்டு, பேரணியில் பங்கு பெற்ற சம்பவம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் கண் துடிப்புக்கு நடைபெறாமல், முக்கிய அதிகாரிகளின் கண்காணிப்பில் முறையாக நடைபெற வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  சமூக காடு

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், சமூக காடு அமைக்கும் பணிக்கான மரம் நடு பணி தொடங்கியது. இதற்காக முதல் மரத்தை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நட்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் மரங்களின் நட்டனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் மரங்களை நடும் பணியில் கலந்து கொண்டனர். வேப்பமரம், புங்கை மரம், உள்ளிட்ட நாட்டு வகை மரங்கள் நடப்பட்டன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
Embed widget