மேலும் அறிய

"காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி இழுத்து மூடுங்க" - போராட்டத்தில் குதித்த கட்சிகள் 

செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசு தான் பொறுப்பு இந்த கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன -  முத்தரசன்

செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காலாவதியான பரநூல் சொந்த சாவடியை இழுத்து மூடக்கோரி இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள், லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் வரம்பிற்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. 60 km க்கு இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடி இருக்கக் கூடாது மற்றும் திட்டமடி தொகை வசூல் ஆகிய முடிந்த பிறகு பரமாரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பரனூர் சுங்கச்சாவடியில் பின்பற்றவில்லை. மூன்று ஆண்டுகளில் விதிகளை மீறி போய் 28 கோடி ரூபாய் வசூலித்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1956 க்கு முன்பாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திட்ட மதிப்பீட்டில், சேர்க்கக்கூடாது என்ற விதியை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு வகைகளின் முறைகேடாக செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடிக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர். 


இந்தப் போராட்டத்தில், திமுக, விசிக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை பரனூர் சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. அதனால் தற்போது மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம், தமிழக அரசு இந்த சுங்கச்சாவடி அகற்ற மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியான சுங்கச்சாவடியை வைத்து பகல் கொள்ளை அடித்து வருவதை அனுமதிக்க முடியாது.

சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசு தான் பொறுப்பு இந்த கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget