மேலும் அறிய

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்

’’நன்னடத்தை, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்காக 51 பேருடைய போக்கிரி பதிவேடு சட்டரீதியாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்’’

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போக்கிரி ரவுடிகளின் நடத்தைகளைக் கண்காணித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 51 போக்கிரி ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் மனிதநேய நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு தொடங்கி காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் குற்ற செயல்களில் ஈடுபடாமல், கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக எந்த வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்து வரும் 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு நன்னடத்தை காரணமாக, அவர்கள் திருந்தி வாழ மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வாய்ப்பு வழங்கினார்.

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்
 
இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கொரடாச்சேரி காவல் நிலையம், மன்னார்குடி காவல் நிலையம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம், நன்னிலம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போக்கிரி ரவுடிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் வந்த 51 போக்கிரி ரவுடிகளை திருந்தி வாழும் வாய்ப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். 

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்
 
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளை நேரில் அழைத்து, அவர்களது குடும்ப சுழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, நன்னடத்தை, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்காக 51 பேருடைய போக்கிரி பதிவேடு சட்டரீதியாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இத்தகைய அரிய வாய்ப்பினை மீறி யாரரேனும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர்களின் நல்வாழ்விற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். 

தலைப்பு செய்திகள்

குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
மதுரையில் தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட முகாம்: 12 துறைகள் பங்கேற்பு!
மதுரையில் தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட முகாம்: 12 துறைகள் பங்கேற்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget