மேலும் அறிய

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்

’’நன்னடத்தை, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்காக 51 பேருடைய போக்கிரி பதிவேடு சட்டரீதியாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்’’

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போக்கிரி ரவுடிகளின் நடத்தைகளைக் கண்காணித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 51 போக்கிரி ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் மனிதநேய நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு தொடங்கி காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் குற்ற செயல்களில் ஈடுபடாமல், கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக எந்த வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்து வரும் 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு நன்னடத்தை காரணமாக, அவர்கள் திருந்தி வாழ மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வாய்ப்பு வழங்கினார்.

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்
 
இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கொரடாச்சேரி காவல் நிலையம், மன்னார்குடி காவல் நிலையம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம், நன்னிலம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போக்கிரி ரவுடிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் வந்த 51 போக்கிரி ரவுடிகளை திருந்தி வாழும் வாய்ப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். 

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார்
 
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளை நேரில் அழைத்து, அவர்களது குடும்ப சுழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, நன்னடத்தை, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்காக 51 பேருடைய போக்கிரி பதிவேடு சட்டரீதியாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இத்தகைய அரிய வாய்ப்பினை மீறி யாரரேனும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர்களின் நல்வாழ்விற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். 

தலைப்பு செய்திகள்

Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
Tamilnadu Round Up: டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
Kutralam falls status : ’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Tamilnadu Round Up: டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Kutralam falls status : ’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
Embed widget