Eyes and Ayurveda : உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? - ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்
கண்களை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதற்கு ஆயுர்வேதம் எளிமையான டிப்ஸ் நல்கியுள்ளது.
கண்களை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதற்கு ஆயுர்வேதம் எளிமையான டிப்ஸ் நல்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் திரை, லேப்டாப், தொலைக்காட்சி என்று நாம் நிறைய நேரம் திரையைப் பார்க்கிறோம். அதனால் நம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
டாக்டர் டின்பிள் ஜங்டா என்ற ஆயுர்வேத நிபுணர் இதற்கு டிப்ஸ் கூறியுள்ளார். இந்தக் காலத்தில் டிஜிட்டல் டிவைஸ்களால் பெரும்பாலானோர் கண்ணில் பாதிப்புகளைப் பெறுகின்றனர். கண்களுக்கு அளவுக்கு அதிகமான வெளிச்சம் பாய்கிறது. கண்களின் தசைகள் பூமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்கள் தான் பித்த தோசத்தின் மையம். அதனால் காலையில் எழுந்தவுடன் கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அப்போது வாயில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். ஆனால் அதிக வெப்பமான தண்ணீரோ அதிக குளிரான தண்ணீரோ பயன்படுத்தி கண்களைக் கழுவக் கூடாது. பார்வை திறனை அதிகரிக்க த்ராதக் என்ற முறையை பின்பற்றலாம். த்ராதக் என்பது பருத்தி திரி கொண்ட நெய் விளக்கை உற்று நோக்குவதாகும்
சோர்வடைந்த கண்களை ஆட்டுப் பாலில் நனைத்த காட்டன் துணியை கொண்டு புத்துணர்ச்சி பெறச் செய்யலாம்.
வறட்ச்சியான கண்களைக் காக்க சுத்தமான விளக்கெண்ணையை கண்ணில் ஊற்ற வேண்டும்.
அதேபோல் வெள்ளரிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை கண்களின் மீது வைக்கலாம். இது கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் டீபேக்ஸை கண்களின் மீது வைக்கலாம்.
இரவு தூங்கும் முன் கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும். கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
டாக்டர் யோகினி பாட்டீல் என்ற ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், "சுத்தமான நெய் மற்றும் தேன் சேர்த்து அதனை தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இது கண்களுக்கு தேவையான ஈரத்தன்மை கொடுத்து கண்ணில் வறட்சியைப் போக்கும்.
திரிபலாவை ஊற வைத்து காலையில் அதை ப்ளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். பின்னர் இதைக் கொண்டு காலையில் கண்களை சுத்தம் செய்யலாம்.
வைட்டமின் ஏ நிறைந்த உணவை சாப்பிடலாம். கேரட், கீரை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.
சிரசாசனா, த்ரதகா போன்ற யோகாசனங்கள் செய்யலாம்.
ஆனால் ஆயுர்வேத நிபுணரிடம் முழுமையான ஆலோசனையைப் பெற்று இந்த பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது" என்றார்.
View this post on Instagram