![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mother Teresa's 25th Death Anniversary: அன்னை தெரசாவின் 25 வது ஆண்டு நினைவு தினம் ! யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!
ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்தாலும், அன்னை தெரசா தனது பிறந்தநாளாக ஆகஸ்ட் 27 அன்று கருதினார், ஏனெனில்
![Mother Teresa's 25th Death Anniversary: அன்னை தெரசாவின் 25 வது ஆண்டு நினைவு தினம் ! யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்! Mother Teresa's 25th Death Anniversary: Interesting Facts About the Founder of Missionaries of Charity Mother Teresa's 25th Death Anniversary: அன்னை தெரசாவின் 25 வது ஆண்டு நினைவு தினம் ! யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/05/b6e656169112151e720b74ec672c127e1662365581902224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அன்னை தெரசா:
கத்தோலிக்க திருச்சபையால் கல்கத்தாவின் புனித தெரசா என்று அழைக்கப்படும் அன்னை தெரசாவின் முழுப்பெயர் மேரி தெரசா போஜாக்ஷியு. இன்று அவருக்கு 25 வது ஆண்டு நினைவு தினம் . 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி, இன்றைய ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்ஜியில் பிறந்தார், அந்த நேரத்தில் அந்த நாடு ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.சிறு வயதில் இருந்தே அதீத இரக்க குணமும் , உதவி மனப்பான்மையும் கொண்டவராக இருந்தார் தெரசா. உதவ்ஸ்கோப்ஜியில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, தெரசா அயர்லாந்திற்கும் பின்னர் இந்தியாவிற்கும் குடிபெயர்ந்தார். இறுதியில் அல்பேனிய-இந்திய அடையாளத்தைப் பெற்றார். 1950 ஆம் ஆண்டில், அவர் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவினார். அந்த சேரிட்டி நிறுவனம் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட மிஷனரிகளைக் கொண்ட ஒரு மத சபையாகவும் , ஏழை ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்தும் வருகிறது.
ஐந்து மொழியில் வல்லவர் :
அன்னை தெரசாவின் முழுப் பெயர் அன்னை மேரி தெரசா போஜாக்ஷியு, ஆனால் அவரது இயற்பெயர் அஞ்சேஸ் கோன்ஷே போஜாக்ஷியு. அல்பேனிய மொழியில் Anjezë என்றால் ரோஜா மொட்டு என்று பொருள்.ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்தாலும், அன்னை தெரசா தனது பிறந்தநாளாக ஆகஸ்ட் 27 அன்று கருதினார், ஏனெனில் அது தான் ஞானஸ்நானம் பெற்ற நாள்.தெரசா தனது குழந்தைப் பருவத்தில், வங்காளத்தில் மிஷனரிகளின் கதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாக மதத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.அல்பேனியன், பெங்காலி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் செர்பியன் ஆகிய ஐந்து மொழிகளில் தெரசா சரளமாக பேசக்கூடியவராக இருந்திருக்கிறார் அன்னை தெரசா.
ஏழைகளுக்கு உதவுங்கள் :
1982 லெபனான் போரின் போது, பாலஸ்தீனிய கெரில்லாக்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆகிய இரு தரப்பினரையும் தெரசா சமாதானப்படுத்தினார் . மேலும் மருத்துவமனையில் சிக்கியிருந்த 27 குழந்தைகளை மீட்டார்.1979 ஆம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.ஒரு வருடத்திற்குப் பிறகு 1980 ஆம் ஆண்டில் தெரசாவுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது - பாரத ரத்னா - வழங்கப்பட்டது.நோபல் கமிட்டியிடம் தனது விழாவிற்கு பூங்கொத்து வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தை இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.1997 இல் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரை, தெரசா உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 517 க்கும் மேற்பட்ட பணிகளில் பணியாற்றினார்.
விமர்சனம் :
கருக்கலைப்பு எதிர்ப்பு மற்றும் கருத்தடை எதிர்ப்புக் கருத்துக்களுக்காக அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார்.சில கல்விப் படைப்புகளில் அவர் ஒரு மத ஏகாதிபத்தியவாதி என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மதத்தினருக்கும் அவர் ஆற்றிய சேவைக்காக, இந்திய அரசாங்கம் அவரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் நடத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)