மேலும் அறிய

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு எஃப்ஐஆர் இணையத்தில் வெளியான நிலையில், குற்றவாளி பாலியல் வன்கொடுமைக்கு உடன்பட வைத்தது எப்படி என பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றில் அவலம்!

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.

அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுவும் காதலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரை விரட்டிவிட்டு ஞானசேகரன் என்பவர் இத்தகைய கோர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஞானசேகரன் கைது; திமுக நிர்வாகியா?

மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நிற்கும் புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலின் அருகில் நிற்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

இச்சைக்கு இணங்காவிட்டால்...

அதில், நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து, ’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

போதாததற்கு ’’மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.

மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி யாருமே புகார் அளிக்கக் கூடாதா?

அதே நேரத்தில், மாணவியின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலத்தில் இனி யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance
CM CHAIR உங்களுக்கு..மத்ததெல்லாம் எங்களுக்கு நிதிஷிடம் பாஜக டீலிங் | Nitish Kumar | Bihar Goverment
”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
Embed widget