மேலும் அறிய

தயிருடன் மீன், கீரை சாப்பிட்டால் பிரச்னை வருமா? என்ன சொல்கிறார் மருத்துவர் கு. சிவராமன்!

தயிர் பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும், ஒரு வித மந்தநிலையை உருவாக்கும். செரிமானம் சீராக நடந்தால் தான் அந்த சத்துக்களை உடல் எடுக்கும்.

சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் மீன் அல்லது கீரை சாப்பிடும்போது தயிர் எடுத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக பலரது வீடுகளில் சொல்லிவிடுவது வழக்கம். ஆனால் தயிருடன் வறுத்த மீன் காம்போவுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. பழைய சோற்றில் தயிருடன், கருவாட்டு தொக்கு, முந்தின நாள் வைத்த மீன் குழம்பு, அந்த மீன் குழம்பில் முதல் நாள் கண்டுகொள்ளாததால் எஞ்சிக்கிடக்கும் கடைசி வால் துண்டு என்று அதற்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இது எவ்வளவு தூரம் ருசியோ அதே அளவு இதற்கு வீடுகளில் எதிர்ப்பும் உண்டு. தயிருடன் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வரும் வாய்புள்ளது என்று கூறுவார்கள். ஆனால் எது உண்மை என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார். 

தயிருடன் மீன், கீரை சாப்பிட்டால் பிரச்னை வருமா? என்ன சொல்கிறார் மருத்துவர் கு. சிவராமன்!

"தயிரும் மீனும் சேர்த்து சாப்பிடுவது கெடுதல் என்று கூறுகிறார்கள். சங்க கால உணவு முறையில் நட்புச்சரக்கு, பகைச்சரக்கு என்று உணவுகளை பிரித்துள்ளனர். எதையும் எதையும் இணைத்து உண்ணலாம், எதை உண்டால் எதை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை மிகப்பெரிய அட்டவணை உருவாக்கி பிரித்துள்ளனர். தயிரும் மீனும் உண்ணக்கூடாது என்பது இப்போது வரை பலரும் வீட்டில் சொல்லும் வழக்கமாக இருக்கிறது. அது மந்த நிலையை உருவாக்கும் என்பதால் வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று யூகிக்கிறோம். ஏனென்றால் தயிர் பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும், ஒரு வித மந்தநிலையை உருவாக்கும் என்பதனால், அதை சத்து மிகவும் அதிகமாக உள்ள மீனுடன் உண்ண வேண்டாம் என்று கூறியிருக்கலாம். 

தயிருடன் மீன், கீரை சாப்பிட்டால் பிரச்னை வருமா? என்ன சொல்கிறார் மருத்துவர் கு. சிவராமன்!

ஏனென்றால், அவ்வளவு சத்துக்களையும் உடல் எடுத்துக்கொள்வதை தயிர் தடுக்கும் வாய்ப்பு உள்ளது. செரிமானம் சீராக நடந்தால் தான் அந்த சத்துக்களை எடுக்கும் உடல். ஆனால் தயிர் அஜீரணத்தை தந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம். வேறு ஒன்றும் இல்லை, அதனால் தான் தயிர் சாப்பிடும்போது மீன் சாப்பிட வேண்டாம் என்பார்கள், தயிருடன் கீரை சாப்பிடக்கூடாது என்பார்கள். இரண்டுக்கும் காரணம் அஜீரணம் ஆகி விடும் என்னும் பயம் மட்டுமே, வேறு எதுவும் கிடையாது. கிராமங்களில் தயிரும், கருவாடும் மட்டுமே வைத்து சாப்பிடும் வழக்கங்கள் உள்ளன, அதற்காக அது நச்சாக எல்லாம் மாறி விடாது, அப்படி பயப்பட தேவை இல்லை. பொதுவாகவே தயிருடன் மீனும், கீரையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது." என்று தயிர் உடன் சேர்த்து ஏன் மீனும், கீரையும் உண்ணக்கூடாது என்று மருத்துவர் கு. சிவராமன் விளக்கினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget