By: ஐஷ்வர்யா சுதா | Updated at : 12 Dec 2022 09:18 PM (IST)
பழங்கள்
பழங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டுமானால் பழங்களை சரியாக சாப்பிடுவது மிகவும் முக்கியம். பழங்கள் நமது எடை இழப்புக்கு சிறந்தவை என்பது அனைவரும் அறிந்ததே, ஏனெனில் அவை கலோரிகளில் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து நிறைந்தவை. பழங்களை சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றைப் பெறுவதால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழங்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்றவை நிறைந்துள்ளன, அவை நம் உடல் நன்றாக செயல்படத் தேவைப்படுகின்றன. பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம், இல்லையெனில் பழங்களின் முக்கிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.
பழங்களை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய பல்வேறு தவறுகள்
உணவுடன் பழங்களை உண்ணுதல்:
பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானத்துக்குத் தயாராகிவிடும். பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நச்சுத்தன்மை உருவாகும். உண்மையில் இவ்வாறு உணவை இணைத்து உண்ணுதல் நம்மில் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். கனமான உணவு ஜீரணிக்க எடுக்கும் வரை பழங்கள் வயிற்றில் தங்கி இருக்க வேண்டும். இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுதக் கடினமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய விஷயம் என்னவென்றால், பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும், இது நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது.
இரவில் பழங்களை உட்கொள்ளுதல்:
உறங்கச் செல்வதற்குச் சற்று முன் உணவு உட்கொள்ளும் போது நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். பழங்களின் உட்கொள்ளலுக்கும் இது பொருந்தும். படுக்கைக்கு முன் பழங்களை சாப்பிடுவது அதிக சர்க்கரையை வெளியிடும் மற்றும் இது ஆற்றல் அளவை அதிகரிக்கும். இதனால் நமது தூக்கம் கெட்டுவிடும். இரவில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைவாக இருக்கும். எனவே, இரவு நேரங்களில் பழங்களை உண்ணும் போது அது நமக்கு அமிலத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும். பழங்களை மாலையில் சிற்றுண்டியாக மட்டுமே சாப்பிடுவது நல்லது, பின்னர் சாப்பிடக்கூடாது.
உடனடியாக குடிநீர் அருந்துவது நல்லதா?
இது நம்மில் பெரும்பாலோர் செய்யும் பொதுவான தவறு. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள், இதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட்டால் இது பெரும்பாலும் இருக்கும். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது பிஎச் சமநிலை மாறி வயிற்றின் அமிலத்தன்மை குறையும். இது வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
பழங்களை தோலை நீக்கிவிட்டு உண்பது:
பழத்தோலில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை உள்ளன, மேலும் நம்மில் பெரும்பாலோர் தோலை நீக்கிவிட்டு பழத்தின் பகுதியை மட்டுமே சாப்பிடுகிறோம், தோலை அல்ல. பழத்தோலை சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன
அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்
Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!
Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?