மேலும் அறிய

அருமையான தொழிற்பயிற்சி... அதுவும் உதவித் தொகையுடன் - எங்கு தெரியுங்களா?

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க இருக்காங்க. உங்களுக்கான வாய்ப்பு இதோ.

வாலிபர்கள் கவனத்திற்கு... அருமையான தொழிற் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுவும் உதவித் தொகையுடன். எங்கு தெரியுங்களா? முழு விபரம் உங்களுக்காக!!!

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க இருக்காங்க. ICF சென்னை 2025-ம் ஆண்டுக்கான தொழில்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,010 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. இதை மிஸ் செய்து விடாதீர்கள். சென்னையில் அமைந்துள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) தொழிற்பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மத்திய அரசு நிறுவனங்களில் தொழிற்பயிற்சி சட்டம் 1961 படி, 1 வருடத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அனுபவமில்லாதவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பெண்டர், எலெக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிஸ்ட், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1,010 பணியிடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் புதியதாய் சேர்பவர்களுக்கு 330 இடங்கள், ஐடிஐ முடித்தவர்களுக்கு 680 இடங்கள் என வழங்கப்படுகிறது. இது அருமையான வாய்ப்பு. முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவித் தொகையுடன் வழங்கப்படும் தொழிற் பயிற்சியை மிஸ் செய்யலாமா?

தொழிற்பயிற்சியின் படி கார்பெண்டர் 90,  எலெக்ட்ரிஷியன் 200, பிட்டர் 260, மெக்கானிஸ்ட் 90, பெயிண்டர் 90, வெல்டர் 260, ரேடியோலாஜி 5, பாதோலாஜி 5, பாசா (PASAA) 10 என மொத்தம் 1,010 இடங்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு 1 வருடமும், 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு 2 வருடமும், வெல்டர் மற்றும் ரேடியோலாஜி, பாதோலாஜி பிரிவுகளில் 1 வருடம் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்பயிற்சிக்கு 11.08.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 15 வயதை நிறைந்து இருக்க வேண்டும். மேலும் அதிகப்படியாக 22 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஐடிஐ முடித்தவர்கள் அதிகப்படியாக 24 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

பிட்டர், எலெக்ட்ரிஷியன், கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், ப்ரோகிராமிங் மற்றும் சிஸ்டம் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த தொழிற் பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் இல்லாதவர்களுக்கான இடங்களுக்கு 10-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியோலாஜி மற்றும் பாதோலாஜி இடங்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும். அதே போன்றும், 12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும். 2ஆம் ஆண்டு பயிற்சி காலத்தில் கூடுதலாக 10% உயர்த்தப்படும். விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடற்தகுதி/ மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இறுதியாக அவர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மாற்றுத்திறனாளிகளும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பெறப்படுகிறது. எனவே காலதாமதம் செய்யாமல் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget