மேலும் அறிய

பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!

பழனி முருகன் கோவில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலில் செயல்பட்டுவரும் சித்தமருத்துமனையில் சித்த மருத்துவர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழகத்தில்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!

இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயலபட்டுவரும் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் ஆகிய பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்து சமய அறநிலையத்துறைப்பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 19

சித்த மருத்துவர் – 3

கல்வித்தகுதி:

தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம்.

செவிலியர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 5

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதத் ரூபாய் 12 ஆயிரம் என நிர்ணயம்.

மருந்தாளுனர் – சித்தா (Pharmacist – Siddha) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 3

கல்வித் தகுதி :

இப்பணிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ. 15,000 என நிர்ணயம்.

பாதுகாவலர் காவலர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 4

கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

சுகாதாரப் பணியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 4

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000 என நிர்ணயம்.

வயது வரம்பு : மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் கீழ்க்கண்ட முகவரிக்கு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

  • பழனி முருகன் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் மார்ச். 31-க்குள் விண்ணப்பிக்கவும்!hi

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி- 624601

திண்டுக்கல் மாவட்டம்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி எப்போது தெரியுமா?
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி?
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget