மேலும் அறிய

அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு!

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் அக்டோபர் 16 க்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இயங்கிவருகிறது. இவ்வாரியத்தின் மூலம் பொறியியில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பினை முடித்த மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிக்குப்பிறகு தொழில் வாரியத்தின் மூலம் தரப்படும் சான்றிதழ் வைத்திருந்தால் அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டுவருகிறது.

  • அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு!

அதன்படி, இந்தாண்டு தற்போது திருச்சி அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் நடத்தப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்குத் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கும்பக்கோணம் கிளையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால், கும்பகோணம் கிளை மற்றும் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், இயந்திரவியல்(mechanic) தானியங்கிவியலில் (automation) துறையின் கீழ்  பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தகுதியான நபர்கள் www.boat.srp.com என்ற இணையத்தின் மூலமாக தகவல்களைப்பெற்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து,அக்டோபர் 16க்குள்  இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதிக்கு பிறகு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக அவர்களுக்கு பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் மூலம் பெறப்படும் சான்றிதழை வைத்திருக்கும் நபர்கள், எந்தப்பணிக்கு சென்றாலும் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு!

குறிப்பாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு மற்ற மாநிலங்களை விட தமிழக இளைஞர்களிடம் தான் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை என அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த பயிற்சி வாரியத்தின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம் போன்ற மாநிலங்களிலும் இந்த சேவைகளை பொறியியல் பட்டதாரிகள் பெற்றுவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget