காவல்துறையில் வெடிகுண்டு பிரிவில் வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க கடைசி தேதி
காவல்துறைக்காக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் பிரிவுகளில் பின்வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வாளர் (BDDS) - முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர், 2 காலியிடங்கள்
ஊதிய அளவு: ரூ.37,700-1,19,500
உதவி ஆய்வாளர் (BDDS) - முன்னாள் நாயிப் சுபேதார் -14 காலியிடங்கள்
ஊதியம்: ரூ.36,900-1,16,600
தலைமை காவலர் (BDDS) - முன்னாள் ஹவில்தார்/ நாயக் – 43 காலியிடங்கள்
ஊதிய அளவு: 20,600-65,500
என்ன தகுதி?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும்:
வயது 01.07.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ளவர்கள், கல்வித் தகுதி குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, தொழில்நுட்ப தகுதி CME, புனே அல்லது NSG அல்லது BCAS ஆல் நடத்தப்படும், குறைந்தபட்சம், 6 வார BDD படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்
இராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம்-NBDC அல்லது விமான நிலையங்களின் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவத் தகுதி - SHAPE-I.
அக்டோபர் 31 கடைசித் தேதி
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுயவிவரங்கள் (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/ அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், மருதம், எண்.17, போட் கிளப் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028 என்ற முகவரிக்கு 31.10.2025-க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் தேர்வு சோதனைகளுக்கு (சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் போன்றவை) அழைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.






















