மேலும் அறிய

பொறியியல் பட்டதாரியா? சென்னை துறைமுகத்தில் வேலை ரெடி. உடனடியா அப்ளை பண்ணுங்க..

சென்னை துறைமுகப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை  துறைமுகத்தில் காலியாக உள்ள  செயற் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவின் மிகப்பெரிய  மற்றும் முன்னணி துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை துறைமுகம் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இத்துறைமுகம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்கி வருகிறது.  தற்போது சிங்கப்பூர், ஆங்காங், சாங்காய் ஆகிய துறைமுகங்களுடன்  சென்னை துறைமுகத்தை ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.  தற்போது உலகின் 86 வது பெரிய கொள்கலன் துறைமுகமாக உள்ளது மற்றும் ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன் திறனை விரிவுபடுத்தத் திட்டங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சென்னை துறைமுகத்தில்  பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது செயற்பொறியாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்

பொறியியல் பட்டதாரியா? சென்னை துறைமுகத்தில் வேலை ரெடி. உடனடியா அப்ளை பண்ணுங்க..

சென்னை துறைமுகத்தில் செயற் பொறியாளர் (EXECUTIVE ENGINEER) பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 16

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூபாய் 50 ஆயிரம்- 1,60,000 என நிர்ணயம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf இந்தப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதோடு, பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்துக்கொண்டு, தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

SECRETARY,

CHENNAI PORT AUTHORITY,

RAJAJI SALAI,

 CHENNAI – 600001

தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள், உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - மாவட்டத்திற்கு புதிய அடையாளம்!
விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - மாவட்டத்திற்கு புதிய அடையாளம்!
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget