மேலும் அறிய

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை - தந்தையை கைது செய்த போலீஸ்

’’வீட்டிலேயே பார்க்கப்பட்ட பிரசவம் பார்க்கும்போது கர்ப்பிணி கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்’’

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, கோமதி (28) என்ற பெண்ணுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கருவுற்ற கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளில் கர்பிணி கோமதிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லோகநாதன் அவரது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூப்பை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ளவிரு வீட்டிலேயே கோமதிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.


யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை - தந்தையை கைது செய்த போலீஸ்

அச்சமயம் இருவர் பார்த்த பிரசவத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இறந்து பிறந்த நிலையில் கர்ப்பிணி கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணி கோமதிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் குழந்தைகயை பரிசோதித்த போது குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கோமதிக்கு இங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அடுக்கம்பாறை அழைத்து வந்து அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி கோமதி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.


யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை - தந்தையை கைது செய்த போலீஸ்

இந்நிலையில், புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன், குழந்தை இறப்பு தொடர்பாக நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் யூடியூப் மூலமாக வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை - தந்தையை கைது செய்த போலீஸ்

இது குறித்து லோகநாதன் விசாரணையில் கூறியதாக கூறப்படுவது. தனது மனைவிக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்படவில்லை. அதற்க்கு பிறகு தான் வலி வந்தது வலி பொறுக்காமல் எனது மனைவி துடிதுடித்தால் அதனால் செய்வதறியாது. எனது அக்கா உதவியோடு குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்து நாங்களே பிரசவம் பார்த்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டது. மற்றபடி நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும், யூடியூப்பை பார்த்தும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தை இறந்தது தொடர்பாக லோகநாதன் காவல்துறையால் கைது செய்யபப்ட்டுள்ளார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
Embed widget