மேலும் அறிய

மதுரை மாநகராட்சி அதிரடி.. தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளியா? புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு!

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3 வாகனங்கள் மற்றும் புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாய்கள் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சி ” தெருநாய்களை பிடிப்பதற்கு” புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தனியார் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் தெருநாய்களை பிடிப்பதற்காக வழங்கப்பட்ட புதிய வாகனங்களை ஆணையாளர் சித்ரா விஜயன், பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.    

தெருநாய்களுக்கு ரேபிஸ்  
 
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாங்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், அதனை தொடர்ந்து கவனிக்க முடியாமல் தெருக்களிலும், காட்டுப் பகுதிகளிலும் விட்டுச் செல்கின்றனர். இப்படியாக தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நாய் இனப்பெருக்கம் செய்து தற்போது தெருக்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதைக் கடந்து வீட்டிற்கு செல்வது மிகப்பெரும் சவாலாக அமைகிறது. இதில் எந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் அஞ்சி பதற்றத்துடன் வீடு சென்று நிம்மதி அடைகின்றனர். இப்படியான சூழ்நிலையை தான் நாள்தோறும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி தெருநாய்களை பிடிப்பதற்கு” புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
மதுரை மாநகராட்சிக்கு புதிய நாய் வாகனங்கள்
 
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சியின் நாய்கள் பிடிக்கும் 3 வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தெருநாய்கள் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் அதிகளவில் வருவதாலும், மாநகராட்சி பகுதிகளில் தற்போது நாய்கள் அதிகளவில் திரிவதால் அவற்றை பிடிப்பதற்காக தனியார் வங்கி (கரூர் வைஸ்யா வங்கி, மதுரை) பங்களிப்பின் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 நாய்கள் பிடிக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள்
 
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3 வாகனங்கள் மற்றும் புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாய்கள் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.  புதிதாக வழங்கப்பட்ட நாய்கள் பிடிக்கும் வாகனத்தை ஆணையாளர்  பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.  
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் (கணக்கு) வெங்கட்ரமணன்,  உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளர் தினேஷ்குமார், முதுநிலை மேலாளர் மனோஜ்குமார், உதவி பொது மேலாளர் சதீஸ்பாபு, விற்பனை மேலாளர் வெங்கட் சிவசுப்பிரமணியன், கிளை மேலாளர் சொர்ணலதா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget