மேலும் அறிய

Breast Cancer : மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?‌ சுய பரிசோதனை செய்வது எவ்வளவு முக்கியமானது?

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி மேமோகிராம் என்ற  ஊடுகதிர்ப்படச் சோதனை ஆகும். 

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக  அனுசரிக்கப்படுகிறது.

மார்பக திசுக்களில் தோன்றும் புற்றுநோயே, மார்பக புற்றுநோய் என அறியப்படுகிறது. பால் சுரப்பி நாளங்கள் அல்லது மார்பக அடுக்குகளில் இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமானது தான் தமது  மார்பகங்களை மாதத்திற்கு ஒரு முறையேனும் பரிசோதிப்பதாகும். 

மார்பகத்தின் சுய பரிசோதனைக்குப் பிறகு, மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான சிறந்த கருவி மேமோகிராம் ஆகும் என கூறப்படுகிறது. பெண்களை பாதிக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் கவலைக்குரிய  ஒன்றாகும்.

சுய பரிசோதனைக்குப் பிறகு, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி மேமோகிராம் என்ற  ஊடுகதிர்ப்படச் சோதனை ஆகும். சில மார்பக புற்றுநோயாளிகளுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தென்படாது என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சிலருக்கு அதிக அளவிலான மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள்   காணப்படுகின்றன. இதில்  சில பெண்களின் மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன .
மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டி போன்று இருப்பது அதன் கூடுதல் அறிகுறிகளில் ஒன்றாகும்.

 மார்பகத்தில் வலி, மற்றும் முலைக்காம்பில் நீர் போன்று வெளியேறுவது , அத்துடன் இரத்தம் வெளிவருதல் என பல அறிகுறிகள் காணப்படும்.

ஆகவே மாதத்திற்கு  ஒருமுறையேனும்  மார்பகங்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உயிர் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர் .

மார்பக சுய பரிசோதனை:

ஒரு கண்ணாடியின் முன் மேலாடையின்றி ,ப்ரா ஏதும் அணியாமல் இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து, உங்கள் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகளில் ஏதேனும் மாறுபாடுகள் உள்ளதா என்பதைக் கவனிக்கவும். 

அதேபோல் கைகளை உயர்த்தி அக்குள் பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து கொள்ளவும். இறுதியாக மார்பு தசைகளை பிடித்து பார்க்கும்போது, ​​ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைக் கவனிக்க முயற்சி செய்யவேண்டும்.

 கைகளால் ஆய்வு செய்தல்: 

கையைப் பயன்படுத்தி உங்கள் மார்பகங்களைப் பரிசோதிக்கவும். உங்களின் முதல் மூன்று விரல்களை பயன்படுத்தி கட்டிகள் ஏதேனும் உள்ளதா என கண்டுபிடிக்க  மார்பகங்களின் மேல் லேசான அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். பின்னர்  முலைக்காம்புகளை அழுத்தி, நீர் வெளியேற்றம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளவும்.

படுத்திருக்கும்போது மார்பகத்தை பரிசோதித்தல்:

உங்கள் மார்பகங்களில் உள்ள திசுக்கள் படுத்துக்கொள்ளும்போது சமமாகப் பரவியிருப்பதால் அதில் ஏதேனும் கட்டிகள் இருந்தால் கண்டுபிடிப்பது இலகுவாக இருக்கும். இரண்டு  மார்பகத்தையும் நன்கு அழுத்தி  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .அவ்வாறு சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் சிறிய கட்டிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

மார்பில் வீக்கம் அல்லது கட்டி போன்று இருந்தால் பரிசோதனை மிகவும் அவசியமாகும். ஒரு பக்கம் மார்பகம் பெரிதாக இருந்தால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை பரிசோதித்து பார்க்க வேண்டிய அவசியம் இருப்பின் மருத்துவரை கலந்து ஆலோசித்து மேம்மோகிராம் எனப்படும் எக்ஸ்ரே டெஸ்ட் மற்றும் ஸ்கேன் டெஸ்ட் எடுப்பது மிகவும் அவசியமாகும். செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவை காரணமாக மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
Kidney Disease Symptoms: சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Embed widget