Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 715 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,715ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 637 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 214 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 214 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 35 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 8 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8227 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 3,715 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 715 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,715ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 637 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 214 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 214 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 35 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 8 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8227 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி தான் மிகச்சிறந்த நம்பிக்கை - பிரதமர் மோடி
கோவின் குளோபல் கான்கிளேவ் என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கோவின் தளத்தைப் போன்று தங்கள் நாட்டிலும் செயல்படுத்தப் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. 100 ஆண்டுகளில் கொரோனா போன்ற பெருந்தொற்றை உலகம் கண்டதில்லை. எந்தவொரு ஆற்றல் மிகுந்த நாடும் இது போன்ற சவாலை தனிமையில் சமாளிக்க முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி தான் மிகச்சிறந்த நம்பிக்கை” என்றார்.




















