மேலும் அறிய

கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

கரூரில் முழு ஊரடங்கு : முக்கிய வீதிகள் வெறிச்சோடின. 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கழுகு பார்வை மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வாரத்தில் வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பெறுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கரூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..


கரூர் மாவட்டத்தில் முக்கிய வீதிகள் ஆன பேருந்து நிலையம், கோவை ரோடு, செங்குந்தபுரம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்கபாளையம்,ராயனூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் 17 இடங்களில் சோதனை சாவடிகளும், 13  சோதனை சாவடிகள் நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டு,  (பால், மருத்துவம்) உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்களை அனுமதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர வீணாக சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் சில வாகனங்களுக்கு (ஸ்பாட் பைன்) அபராதம் விதிக்கின்றனர்.


கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தெரிவித்து தங்கள் இல்லத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முறையான காரணங்கள் சொல்லாமல், ”விடுங்கள் செல்கிறேன்” என்று கூறி வருவதால், அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உண்மையில் அவர் கூறும் பதில்கள் உண்மை என இருந்தால் அவர்களை நகரத்திற்குள் அனுமதிக்கின்றனர். இல்லை என்றால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..

தற்போது கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் முகக்கவசம் (மாஸ்க்), சமூக இடைவெளி உள்ளிட்ட தமிழக அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் அறிக்கை மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X" target="">இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  காரணமாக நேற்று இரவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அசைவ உணவுக்கு தேவையான (ஆட்டு கறி ,கோழி)  உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். மொத்தத்தில் கரூரில் பல்வேறு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதனை கழுகு பார்வை மூலம் போக்குவரத்து மற்றும் போலீசார் இணைந்து படம் பிடித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget