மேலும் அறிய
தூத்துக்குடி : குறைந்துவரும் கொரோனா தொற்று : 5 பேர் உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2,266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 5 உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 363-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அப்டேட்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53165 -ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2,266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 5 உயிரிழந்தனர்.இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 149 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வந்த நிலையில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இன்று மட்டும் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 96 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து குமரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















