![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Coronavirus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?
மதுரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் 1236 ஆக உள்ளது.
![Coronavirus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன? Coronavirus Update: Number of coronavirus infections: What is the situation in the southern districts? Coronavirus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/aa48215675a6de587dda592d4f2d656b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை மாவட்டத்தில், இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இன்று வரையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை91029ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 2பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89784-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236இருக்கிறது. இந்நிலையில் 9 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56825ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56259-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 12 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37474-ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36804-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. இந்நிலையில் 5 பேர் கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் புதிதாக நோய் தொற்று பரவல் இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50597-ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50060-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 4 நபர்கள் கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)