மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு, அலர்ஜியால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய தடுப்பூசி ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.

எனினும் தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் மரணம் ஏற்படுகிறது என்ற மக்களின் நம்பிக்கையை போக்க தடுப்பூசி செலுத்திய பின்பு இறந்தவர்கள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்தது. ஏஇஎஃப்ஐ என்ற இந்தக் குழு 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. அதாவது, பிப்ரவரி 5-இல் நிகழ்ந்த 5 மரணங்கள், மார்ச் 9-இல் நிகழ்ந்த 8 மரணங்கள், மார்ச் 31 ஆம் தேதி நிகழ்ந்த 18 மரணங்கள் என்று மொத்தம் 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

இவற்றை ஆய்வு செய்த குழு தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,"31 மரணங்களில் 18 மரணங்களுக்கும் தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லை. மேலும் 7 மரணங்களுக்கான உரிய காரணத்தை அறிய முடியவில்லை. 3 மரணங்கள் தடுப்பூசி ஒரு காரணமாக இருக்கலாம். 2 மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என்று உரிய ஆவணங்கள் இல்லை. ஒரே ஒரு மரணம் மட்டும் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜியின் காரணமாக ஏற்பட்டுள்ளது"  எனத் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் 8-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் ஒருவர் மார்ச் 9-ஆம் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு தடுப்பூசி தொடர்பான அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜி ஏற்பட்டு இறந்துள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பிறகு குணம் அடைந்துவிட்டனர். ஆனால் இந்த நபர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்திய பிறகு ஒவ்வாமை காரணமாக இறந்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

அனஃபைலேக்சிஸ் என்பது ஒரு உணவு, மருந்து அல்லது ஊசி தொடர்பாக ஏற்படும் அலர்ஜி ஆகும். சில சமயங்களில் தேனீக்கள் கடித்தாலும் இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும். இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும் போது பல்ஸ் அளவில் மாறுபாடு ஏற்படலாம். அதை சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் மரணம் வரைக் கூட செல்லக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
Embed widget