மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு, அலர்ஜியால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய தடுப்பூசி ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.

எனினும் தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் மரணம் ஏற்படுகிறது என்ற மக்களின் நம்பிக்கையை போக்க தடுப்பூசி செலுத்திய பின்பு இறந்தவர்கள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்தது. ஏஇஎஃப்ஐ என்ற இந்தக் குழு 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. அதாவது, பிப்ரவரி 5-இல் நிகழ்ந்த 5 மரணங்கள், மார்ச் 9-இல் நிகழ்ந்த 8 மரணங்கள், மார்ச் 31 ஆம் தேதி நிகழ்ந்த 18 மரணங்கள் என்று மொத்தம் 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

இவற்றை ஆய்வு செய்த குழு தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,"31 மரணங்களில் 18 மரணங்களுக்கும் தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லை. மேலும் 7 மரணங்களுக்கான உரிய காரணத்தை அறிய முடியவில்லை. 3 மரணங்கள் தடுப்பூசி ஒரு காரணமாக இருக்கலாம். 2 மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என்று உரிய ஆவணங்கள் இல்லை. ஒரே ஒரு மரணம் மட்டும் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜியின் காரணமாக ஏற்பட்டுள்ளது"  எனத் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் 8-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் ஒருவர் மார்ச் 9-ஆம் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு தடுப்பூசி தொடர்பான அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜி ஏற்பட்டு இறந்துள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பிறகு குணம் அடைந்துவிட்டனர். ஆனால் இந்த நபர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்திய பிறகு ஒவ்வாமை காரணமாக இறந்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

அனஃபைலேக்சிஸ் என்பது ஒரு உணவு, மருந்து அல்லது ஊசி தொடர்பாக ஏற்படும் அலர்ஜி ஆகும். சில சமயங்களில் தேனீக்கள் கடித்தாலும் இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும். இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும் போது பல்ஸ் அளவில் மாறுபாடு ஏற்படலாம். அதை சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் மரணம் வரைக் கூட செல்லக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget