மேலும் அறிய

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிப்பு! 409 பேர் உயிரிழப்பு!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால், இதுவரை 65092 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 409 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,500 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. இதனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 409 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து, கடந்த ஏப்., 1 முதல் மே 22-ஆம் தேதி வரை 52 நாட்களில் 13,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 85 பேர் இறந்துள்ளனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 28,806 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 198-ஆகவும் உள்ளது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் 31 வரை 10,951 பேர் பாதிக்கப்பட்டு, 108 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து, ஏப்., 1 முதல் மே 22ம் தேதி வரை 6,881 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் இறந்தனர். இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 17,832 ஆகவும், இறப்பு 121 ஆகவும் உள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த பாதிப்பை விட, கடந்த இரண்டு மாதத்தில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிப்பு! 409 பேர் உயிரிழப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 15 நாட்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால், 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஒரு நாள் அனைத்து கடைகளும் திறக்க அரசு தளர்வு அளித்தது.

இதையடுத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களின் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதனையொட்டி காலை முதலே கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடை வீதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேரம் போக, போக மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கடைகளில் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதனால், திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஒரே நாளில் அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நகரப்பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

மக்கள் கூட்டத்தை கண்ட சமூக ஆர்வலர்கள், கொரோனா அதிகரித்துவரும் சூழலில், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அரசு அறிவுறுத்தியிருக்கலாம். மாறாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடியதால் கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என அச்சப்பட்டனர்.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிப்பு! 409 பேர் உயிரிழப்பு!

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, இதுவரை 40341 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 36645 போ்‌ குணமடைந்தனர்‌. 308 போ்‌ உயிரிழந்தனர்‌. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ இதுவரை 24751 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 21594 போ்‌ குணமடைந்தனர்‌. 182 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறையத்‌ தொடங்கியது. இந்தநிலையில் இன்று (13-06-2021)  170 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிப்பு! 409 பேர் உயிரிழப்பு!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள சுகாதார கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு ஏதும் இல்லாததன் காரணமாக கடந்த 8-ஆம் தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை கோவிஷீல்டு தடுப்பூசி 10 ஆயிரம் டோஸ்களும், கோவேக்சின் தடுப்பூசி 1,500 டோஸ்களும் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டன. கடலூரில் உள்ள குளிர்சாதன மருந்து கிடங்கிற்கு வந்திறங்கிய இந்த தடுப்பூசி மருந்துகளை விழுப்புரத்தை சேர்ந்த சுகாதாரத்துறையினர், கடலூரில் இருந்து பெற்று விழுப்புரம் கொண்டு வந்தனர்.  அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65092 பேர் பாதிப்பு! 409 பேர் உயிரிழப்பு!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புற, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 இடங்களிலும், கூடுதலாக 28 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ”தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு 11,500 டோஸ் தடுப்பூசி சென்னையில் இருந்து வந்துள்ளன. மொத்தம் 100 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துவருகிறது. ஒரு முகாமில் 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம். இனி வரும் நாட்களிலும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்ப மாவட்டத்திற்கு தேவையான அளவிற்கு தடுப்பூசி மருந்துகளை அனுப்புமாறு நாங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை பொறுத்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே சென்னையில் இருந்து வரப்பெறும் தடுப்பூசி மருந்துகளை பொறுத்து அவற்றை மாவட்ட சுகாதார கிடங்கில் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்படும்” என்றார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்.! யாருடையது.? வெளியான திடீர் டுவிஸ்ட்
வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்.! யாருடையது.? வெளியான திடீர் டுவிஸ்ட்
Embed widget