மேலும் அறிய

வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்.! யாருடையது.? வெளியான திடீர் டுவிஸ்ட்

சென்னையில் வங்கி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த 1.250 கிலோ தங்க கட்டிகள் யாருடையது என போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்

தங்க நகைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கமே 12ஆயிரம் ரூபாயை தாண்டி நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த பரபரப்பான நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள HDFC வங்கியில் கேட்பாரற்று கிடந்த 1.250 கிலோ தங்க கட்டிகள் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  கடந்த 5ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள HDFC வங்கி பரபரப்பாக இயங்கி வந்தது. அப்போது பர்தா அணிந்த வந்த பெண் ஒருவர், தனது பெயர் ஷர்மிளா பானு எனவும், தனது கணவர் பெயர் அப்துல்லா என அறிமுகம் செய்துள்ளார்.

வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும், மேலும் நகைகளை வைக்க லாக்கர் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்போது வங்கியில் இருந்த ஊழியர்கள் மேலாளர் வெளியே சென்றுள்ளதாகவும் சிறிது நேரம் காத்திருக்கும் படி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலாளர் வந்த நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வங்கி கணக்கு தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பர்தா அணிந்து வந்த பெண் யார்.?

இதனையடுத்து மதியத்திற்கு பிறகு வங்கியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேக்கில் ஒரு கிலோ தங்க கட்டியும், 250 கிராம் தங்க நகைகளும் இருந்துள்ளது. இது தொடர்பாக வங்கியில் விசாரித்தில் யாரும் உரிமை கோரவில்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக வங்கி மேலாளர் வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 5ஆம் தேதி வங்கிக்கு வந்த சென்றவர்கள் யார் என சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வ நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து  1.250 கிலோ தங்க கட்டிகள் தொடர்பாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த வங்கியின் முன்னாள் மேலாளர் பத்மப்பிரியா சிக்கியுள்ளார். ஏற்கனவே வங்க மேலாளராக இருந்த பத்மப்பிரியா, நீண்ட நாட்களாக வங்கி லாக்கரை உரிமை கோராதவர்களின் லாக்கரில் இருந்து நகைகளை திருடியுள்ளார். அந்த நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் உல்லாசமாக இருந்துள்ளார்.

சிக்கிய முன்னாள் வங்கி மேலாளர்

இந்த நிலையில் தான் வேளச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் தான்  அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் அவர் தன்னுடைய நகைகளை  ஹெச்டிஎஃப்சி வங்கியில் லாக்கரில் 258 கிராம் வைத்து இருந்த நிலையில் அதனை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார்  நடத்திய விசாரணையில் நகைகளை திருடியது வங்கி மேலாளர் பத்மபிரியா என தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பர்தா அணிந்த வங்கிக்கு வந்த பத்மபிரியா நகைகளை விட்டு சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பத்மபிரியா கைது செய்த போலீசார், வங்கியில் விட்டு சென்ற தங்க நகைகள் வங்கி லாக்கரில் இருந்து திருடிய நகைகளா அல்லது வேறு இடத்தில் திருடப்பட்ட நகைகளா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget