மேலும் அறிய

தோழியைக் கொன்றுவிட்டு எப்படி இப்படி? ஏடாகூடமாக கேட்ட நெட்டிசன்; பதிலடி கொடுத்த யாஷிகா!!

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16, கவலை வேண்டாம் படங்கள் மூலமும் கொஞ்சம் அறியப்பட்டார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16, கவலை வேண்டாம் படங்கள் மூலமும் கொஞ்சம் அறியப்பட்டார். இவர் சமூக வலைதளத்தில் தன்னிடம் மனதைக் காயப்படுத்தும் கேள்வியைக் கேட்ட நபருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

யாஷிகா ஆனந்த், இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான். மாடெலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்தார்.

அதே ஆண்டு, துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் அவரைப் பெரிதாக அடையாளப் படுத்தவில்லை. இந்நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. விஜய் டிவியில் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸன் 10-ல் நடுவராக பங்கேற்றார். திரைப்படங்களில் சீரியல்களில் அப்படி இப்படி தலை காட்டினாலும் 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ள யாஷிகா தற்போது மீண்டும் சினிமாக்களில் கமிட் ஆகி வருகிறார். யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் யாஷிகா.


தோழியைக் கொன்றுவிட்டு எப்படி இப்படி? ஏடாகூடமாக கேட்ட நெட்டிசன்; பதிலடி கொடுத்த யாஷிகா!!

இந்நிலையில், அண்மையில் இணையதளத்தில் சேட்டில் இருந்த யாஷிகாவிடம் விஷமம் பிடித்த நெட்டிசன் ஒருவர், "விபத்தில் தோழியைக் கொன்ற பிறகு எப்படி இருக்கிறீர்கள்" என வினவியிருந்தார். அதற்கு யாஷிகா ஆனந்த், " நான் குடிக்கவில்லை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எனக்கு சுயநினைவு இல்லை, மருத்துவமனை ரிப்போர்ட்டில் நான் குடித்ததாக இல்லை. ஒருவரை பற்றி பேசும்முன் தெளிவாக எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வதந்தியை பரப்ப வேண்டாம்" என பதில் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கொடுத்த பதிலடியையும் சிலர் வரவேற்று கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளேமர் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவதில் உள்ளூர் உர்ஃபி ஜாவேத் எனக் கூறலாம். அந்த அளவுக்கு படு கிளாமர் இல்லாவிட்டாலும் கூட அம்மணி தாராளம் தான் எனக் கூறுகின்றனர் ரசிகர்கள்.

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget