மேலும் அறிய

World Music Day: அன்று முதல் இன்று வரை... தமிழ் சினிமாவை ஆளும் இசையமைப்பாளர்கள்...!

அன்று முதல் இன்று வரை காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஏராளமான பாடல்களை தமிழ்  திரையிசையில் கொடுத்த மாபெரும் இசை ஜாம்பவான்களின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்

காலம் காலமாக தமிழ் சினிமாவோடு பின்னி பிணைந்த ஒன்று இசை. கடைக்கோடி ரசிகன் வரை ஒரு படத்தை கொண்டு செல்ல முகவரியாக இருப்பதில் முதல் இடம் வகிப்பது இசையே. திரை இசையில் முழுமையாக கர்நாடக சங்கீதத்தை சார்ந்து இருந்த காலம் மாறி 1950 முதல் நாட்டுப்புற இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டவை தமிழ் சினிமாவின் அங்கங்களாக மாறின. 

தமிழ் திரை இசையில் மென்மையான, உணர்ச்சிகரமான மெல்லிசை பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வலுவாக நிலை நிறுத்திய பெருமை மாபெரும் இசை ஜாம்பவான் ஏ.எம். ராஜாவையே சேரும் . அவரின் வழியே தமிழ் சினிமாவின் இசையை முழுவதுமாக மெல்லிசை பாடல்களாக இடம்பெயர்ந்து சுமார் முப்பது ஆண்டு காலங்கள் ஆட்சி புரிந்த மாபெரும் வெற்றி கூட்டணி எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணி. அவர்களின் பிரிவுக்கு பிறகும் இசை உலகில் முழுமையாக ஆட்சி செய்து வந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். அவரின் இசை தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் இன்றும் அவரே முதலிடத்தை பிடிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

 

World Music Day: அன்று முதல் இன்று வரை... தமிழ் சினிமாவை ஆளும் இசையமைப்பாளர்கள்...!

 

காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஏராளமான பாடல்களை கொடுத்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் கே.வி. மகாதேவன். ஒரு பாடகராக தனது பயணத்தை துவங்கிய ஜி.கே. வெங்கடேஷும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக இருந்தவர். இசைஞானி என தமிழ் சினிமா கொண்டாடும் இளையராஜாவிற்கு திரையிசை அமைப்பை பயிற்றுவித்தவரே அவர் தான். கன்னட திரையுலகத்தில் கொடி கட்டி பறந்த வெங்கடேஷிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இளையராஜா. அதற்கு பிறகு தான் இளையராஜா 'அன்னக்கிளி' பட வாய்ப்பு கிடைத்தது. 


தமிழ் திரையிசையில் நாட்டுப்புற இசையை அடிப்படையாக கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவையே சேரும்.  அதன் மூலம் ஒரு புதிய யூகத்தை துவங்கி வைத்தவர். 30 ஆண்டுகாலமாக கொடி கட்டிய எம்.எஸ்.வியின் மெல்லிசையை முற்றிலுமாக மாற்றியமைத்தார் இளையராஜா. அவரின் வணீக ரீதியான தொடர் வெற்றி அவரை தமிழ் திரையிசையின் ஒரே முகமாக மாறியது.

அதுவரையில் மோனோ முறை இசை மட்டுமே இருந்து வந்த காலத்தில் முதல் முறையாக ஸ்டீரியோ முறையில் பாடல்களை பதிவு செய்யும் ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். நடிகர் ரஜினிகாந்த் ஒரு தனி நாயகனாக 1978 ஆம் ஆண்டு நடித்த 'பிரியா' படத்தில் தான் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். 1950 - 1980 வரை தமிழ் சினிமாவில் பாடல்களின்  பொற்காலம் என்றே கூறலாம். இன்றும் தனது தடத்தை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து மண் மனம் மாறாத இசையை நிலைநிறுத்தி வருகிறார் இளையராஜா. 

 

World Music Day: அன்று முதல் இன்று வரை... தமிழ் சினிமாவை ஆளும் இசையமைப்பாளர்கள்...!

இளையராஜாவின் ஸ்டைலை டோட்டலாக மாற்றி நவீன இசையை ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் திரையிசையின் போக்கையே முற்றிலுமாக மாற்றி உலக அளவில் பிரபலமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்கள் இசைத்துறையை ஆண்டு வந்தாலும் சிறு சிறு பனித்துளிகளாக தங்களுக்கான தனித்துமான இசை மூலம் திரையுலகில் ஒரு தனி இடத்தை பிடித்தனர் கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற எண்ணற்ற இசைமைப்பாளர்கள்.

இடையில் கானா பாடல்கள் என்ற  ஒரு தனி ஸ்டைல் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்  இசையமைப்பாளர் தேவா. இப்படி பலதரப்பட்ட இசையை கண்ட தமிழ் சினிமாவில் ராப் மூலம் துள்ளல் இசையை கொடுத்து இன்றைய இளவட்டங்களுக்கு ஏற்ற துள்ளலான இசையை கொடுத்து வருகிறார் அனிருத். அதே போல வெரைட்டி இசை மூலம் இன்றும் மனங்களை வருடி வருகிறார்கள். இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள். 

இப்படி காலகாலமாக தமிழ் சினிமாவில் இசை என்பது படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு மிக முக்கியமான காரணியாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget